பக்கம் எண் :

பக்கம் :178பூங்கொடி

 
  கற்பனை யாகும்; காப்பமைந் துளதால் 105
  மற்றவர் புகுந்து செற்றனர் என்று
சொற்றிட இடமிலை; சொல்லுமென் கருத்தைச்
சுற்றி வளைத்து மற்றொரு பொருளைப்
படைத்திட வேண்டா பணிவுடன் வேண்டுவல்'
 
     
 

காவலர் குறுக்கீடு

 
     
  எனவாங்கு 110
  முடிக்குமுன் காவல் முதல்வர் மறித்துத்
`துடித்த லின்றிச் சொல்லுக, உண்மை
கிடைக்குமென் றெண்ணிக் கிளறுவ தெம்கடன்;
மற்றவர் தம்மால் மாண்டிலன் என்றால்
 
  தற்கொலை என்று சாற்ற நினைந்தே 115
  இவ்வணம் புகன்றீர் எனுங்கருத் துடையேன்
ஒவ்வுவீ ராயின் உரைமின்' என்றனர்;
 
     
 

மாணவன் ஏக்கவுரை

 
     
  `எவ்வா றவ்வணம் இளம்புவல் ஐய!
செவ்விதிற் றெரியும் செயப்படு கொலையைத்
 
  தற்கொலை என்று சாற்றுதல் தகுமோ? 120
  எற்கெனை யிங்ஙனம் இடையிடை மறித்துப்
பற்பல வினவிப் பாடுறச் செய்கிறீர்?
எனக்கும் கொலைக்கும் எவ்வகைத் தொடர்பும்
மனத்தும் நினைக்க வழியிலை; என்மொழி
 
  அனைத்தும் வாய்மை அறிகதில் ஐய!' 125
  எனப்புகல் மாணவன் ஏங்கி நின்றனன்!  
     
 

காவலர் கனிவுரை

 
     
  `உம்மை ஐயுறும் உள்ளம் எமக்கிலை
மெய்ம்மை தெரிவான் விடுத்தனென் இவ்வினா!
கடுமொழி யன்றிது கனிமொழி யாகும்
 
  விடுகநும் அச்சம் விளம்புக மெய்யே; 130

---------------------------------------------------------------

  தெரிவான் - தெரிய.