|
| அன்பொடு வினவும் ஐய வினாக்கட் கின்புடன் விடைகள் இறுப்பது நும்கடன்; துன்புகள் நும்மைத் தொடரா; உறுதி; வன்பகை இறந்தோற்கு வாய்த்ததும் இல்லை; | |
| பின்பவன் தற்கொலை புரிந்ததும் இல்லை; | 135 |
| செயப்படு கொலையெனச் செப்பலும் செய்தீர்; நயத்தகும் மன்றினுள் நல்லவள் பூங்கொடி சண்டிலி தன்துணை கொண்டு வதிவதும் விண்டனிர்; இவற்றால் விளங்குவ தென்னை? | |
| ஒண்டொடி மகளிர் ஒருவர்மேல் ஐயம் | 140 |
| உற்றனிர் கொல்லோ? மற்றிவர் இருவரும் குற்றம் புரிதல் கூடுமென் றெண்ணம் பெற்றனிர் கொல்லோ? தெற்றென மொழிக!' | |
| | |
| மாணவன் துடிப்பு | |
| | |
| என்றுரை கேட்டோன் `ஈதென் கொடுமை? | |
| நன்றுரை புகன்றீர்! நானதற் கொருப்படேன் | 145 |
| கொன்றெனைச் சிதைப்பினும் கூறேன் அம்மொழி; பயிற்றிய தாயின் பால்முகம் நோக்கின் அயிர்த்தலும் ஒல்லுமோ? ஐயகோ அடாஅது! பாழ்மகன் இறந்தும் பழியினைத் தந்தனன்; | |
| ஆழ்கடல் உலகில் அவள்நிகர் பெண்மகள் | 150 |
| சூழினும் காண்கிலம்; தூயவள் தனக்குத் தாழ்வுகள் வருதல் தகுமோ ஐய! ஊழ்வினை என்றொன் றுளதெனச் செப்புவர் பாழ்வினை யிந்தப் பழிமொழி வடிவிற் | |
| சூழ்ந்தது கொல்லோ? சூழ்ந்தது கொல்லோ?' | 155 |
| என்றவன் அரற்றி யிரங்கித் துடிக்க; | |
| | |
| காவலர் நயவுரை | |
| | |
| `யாது நிகழ்ந்த திங்ஙனம் அரற்றினை? | |
--------------------------------------------------------------- |
| அடாஅது - தகாது. | |
| | |