பக்கம் எண் :

பக்கம் :180பூங்கொடி

 
  தீதுதீர் செயலி தேன்மொழி பூங்கொடி
யாதும் பழியுறாள்; வேதனை விட்டொழி;
 
  ஆழ்கடல் உலகில் அவள்நிகர் பெண்மகள் 160
  சூழினும் காண்கிலம்; தூயவள் தனக்குப்
பாழ்மகன் இறந்தும் பழியினைத் தந்தனன்
என்றனை யன்றோ? இறந்தும் தந்தனன்
என்றதன் உட்பொருள் இயம்புதி கொல்லோ?
 
  இறந்தோன் உயிருடன் இருந்த காலை 165
  அறந்தேர் தெரிவைக் காற்றிய பழியினைத்
திறந்துளம் உரை'எனத் தெரித்தனர் காவலர்;
 
     
 

இருந்தும் பழி இறந்தும் பழி

 
     
  `இசைதெரி வேட்கையன், இவனவள் பாற்கொளும்
நசைபெரி துடையன், நாளுமந் நினைவால்
 
  உருகி உருகி மருகுவன், அவளை 170
  மருவுதல் ஒன்றே வாழ்வின் குறியன்,
ஒருவுதல் நேரின் உயிரும் வேண்டிலன்,
இரவலன் போல இடையிடை அவள்வாற்
குறுகுவன் தன்னுளக் குறிப்பினை விளம்புவன்;
 
  இல்லறம் அறவே வேண்டிலா இம்மகள் 175
  புல்லும் இவனைப் பொருட்படுத் திலளே,
ஆயினும் உண்மை அறியார் சிலர்சிலர்
தாயினைஅலருரை சாற்றுதல் அறிவேன்,
இருந்தும் பழிமொழி இயற்றினன் பாவி
 
  இறந்தும் அம்மொழி ஏற்றினன் பாவி' 180
  என்றுரை கூறி மாணவன் இருந்துழிக்  
     
 

காவலர் வினாவும் காரிகை விடையும்

 
     
  கன்றிய நெஞ்சொடும் கலையுணர் கிழாரொடும்
வந்து நின்றனள் வழுவிலாப் பூங்கொடி;
நொந்தவள் முகத்தினை நுண்ணிதின் நோக்கி
 
  முந்துறக் காவல் முதல்வர் வினவினர்; 185

---------------------------------------------------------------

  செயலி - செய்கையினள், ஒருவுதல் - நீங்குதல்.