பக்கம் எண் :

சிறைப்படு காதைபக்கம் : 181

 
  `ஈண்டிவ் விளையோன் கோமகன் என்பான்
மாண்டமை பற்றி மங்கையுன் விளக்கம்
வேண்டுவல் பூங்கொடி விளம்புக' என்னலும்,
`நெருநல் மாலை பெருநிலக் கிழாரின்
 
  பெருமனை புகுந்து பெரியவ ரவரொடு 190
  நெடிதுரை யாடி நேரிசை பாடி
விடியுமுன் னிரவில் மீளும் பொழுதிற்
படிமிசை இவனுடல் படிந்தது கண்டு
துடிமன முடையேன் தோழியைக் கூஉய்
 
  வயங்கிழை காணாது வழியொன் றறியாது 195
  மயங்கி வீழ்ந்தனென் மற்றொன் றறியேன்'
என்பது கேட்டோர் `இவற்கும் நினக்கும்
முற்பகை யுண்டோ? மொழிக' என்றனர்;
`பொதுப்பணி பூண்டேற்குப் புன்மைப் பகைமை
 
  எதற்கு? நிலமிசை எவரும் பகையிலேன்'; 200
  `கொலையுணும் இம்மகன் கெடியிடை நின்பாற்
பலமுறை வந்து பழகலும் உண்டோ?';
`ஆம்அவன் பலகால் அணுகுவான் என்பால்
தோமறும் இசைபயில் தொழிலோன் ஆதலின்';
 
  `எழில்மிகும் நின்பால் இளையோன் காதல் 205
  விழைந்ததும் உண்டோ? மொழிந்ததும் உண்டோ?'  
     
 

கிழார் குறுக்கீடும் பூங்கொடி கலங்கா மொழியும்

 
     
  இவ்வுரை கேட்டாங் கிருந்திடுங் கிழவர்,
`செவ்விய இவட்குச் சிறுமை யூட்டும்
அவ்வினா வெழுப்புதல் அடாஅது காவல!
 
  ஒவ்வும் முறையால் உண்மை ஓர்க' 210
  இவ்வணம் கடிந்துரை இயம்பின ராகப்
`பொதுநலம் ஒன்றே புரிபவர் எவர்க்கும்
இதுபோல் இடுக்கண் இடையிடை வரலும்
அதுதான் எளிதின் அகலலும் இயற்கை;
 
  சினவேல் ஐய! சிறுமைகள் நமக்கேன்? 215
  வினவுக பெரும, வினவுக பெரும!'  
     
 

வினா விடை தொடர்தல்

 
     
  எழில்மிகும் நின்பால் இளையோன் காதல்  

---------------------------------------------------------------

  வயங்கிழை - சண்டிலி.