பக்கம் எண் :

பக்கம் :182பூங்கொடி

 
  விழைந்ததும் உண்டோ? மொழிந்ததும் உண்டோ?';
`ஆம்ஆம் என்னை அம்மகன் விழைந்ததும்
 
  காம மொழிகள் கழறியதும் உண்மை' 220
  என்றவள் செப்ப, `இசைந்ததும் உண்டோ?
மன்றல் புரியநின் மனமொப் பினையோ?'
என்றவர் வினவ, `இல்லற வாழ்வே
வேண்டிலே னாகி விழைந்திப் பொதுப்பணி
 
  பூண்டுளேன் ஆதலின் புல்லும் அவன்மொழி 225
  பொருளெனக் கொளாஅது போயினென்' என்றனள்;
`ஆங்ஙன மாயின் அவன்றன் போக்கைத்
தீங்கெனக் கருதிச் செற்றம் அவன்பாற்
கொண்டதும் உண்டோ? கொடியன் இவன்எனக்
 
  கண்டு வெறுத்ததும் உண்டோ? உரை' என 230
  `அவனுரை மறுத்துளேன் அவனை வெறுத்திலேன்
சினமொழி தொடுத்துளேன் செற்றம் படைத்திலேன்
ஆணும் பெண்ணும் அவரவர் கருத்தைக்
காணும் பொழுது கழறுதல் இயல்பு
 
  விழைவோர் மற்றவர் விருப்பினைக் கேட்டல் 235
  பிழையோ? உரிமை, என்றது பொறுத்தேன்'  
     
 

பூங்கொடி சிறைப்படல்

 
     
  என்றவள் செப்பினள்; ஏந்திழை மாற்றம்
நின்றவர் செவியில் ஒன்றிய தெனினும்
`கொன்றவர் யாரெனுங் குறிப்பறி காறும்
 
  காவலில் வைப்பதெங் கடமையும் ஆகு'மென் 240
  றொருபிழை யறியாப் பெருமகள் அவளைச்
சிறைசெய் தனரே முறையின் பெயரால்;
 
  குறைசெய் தனரே! குறைசெய் தனரே! 243

---------------------------------------------------------------

  கொளாஅது - கொள்ளாது, ஏந்திழை - பூங்கொடி.