|
|
| பெருநிலக்கிழார் வருந்துதல் | |
| | |
| சிறைபட் டாங்கட் செல்வோள் முகத்து மறைப்பரு கவலை வெளிப்படல் கண்டு மாளாத் துயரால் வதைந்திடுங் கிழவர் `வாளா இனியிரேன் வருவது வருக! | |
| நாளை மீட்பேன் நங்காய் கவலேல்' | 5 |
| என்றுதம் விழியில் இரங்குநீர் துடைத்து நின்றவர் `அந்தோ நேர்மைக் கிடமிலை, நல்லவை செய்தார்க்கு நலிவிலை என்றும் அல்லவை செய்தார்க்கே அழிவுகள் என்றும் | |
| சொற்றன யாவும் வெற்றுரை யாகும்; | 10 |
| முற்றா இளங்கொடி முள்நுனி யளவும் குற்றம் புரிந்திலள் கொடும்பழி வந்ததே; எற்றோ உலகியல்!' என்றவர் ஏகினர்; | |
| | |
| ஊரவர் பழித்தல் | |
| | |
| இசைஇசை எனச்சொலி ஏய்த்தனள் ஊரை! | |
| வசையென நாணாள் மணவினை நாடாள் | 15 |
| துறவினள் போலத் தொண்டெனும் பெயரால் இரவிடை நிகழ்த்தும் இழிசெயல் எத்தனை! ஒருநாள் வெளிவரும் உண்மை என்றனர்; எழில்நிறை உருவமும் இளமைப் பருவமும் | |
| கழிமிக வுடையவள் காரிகை யிவள்தான்! | 20 |
| கலைதெரி பெயரால் கட்டிளங் காளையர் பலர்பலர் அவ்விடைப் பயில்வோர் உளரால் துறவும் தூய்மையும் தொலைவினில் ஓடி மறையும் அன்றி வாழுமோ என்றனர்; | |
| பாயும் புலியும் பசும்புல் வாயும் | 25 |
| காயழல் தீயும் தூயநற் பஞ்சும் நெருங்குமேல் விளைவதை நீணிலம் அறியும்; உறுகேழ் வரகினில் ஒழுகும் நெய்யெனில் | |
--------------------------------------------------------------- |
| எற்றோ - எத்தன்மைத்தோ? புல்வாய் - மான். | |
| | |