பக்கம் எண் :

சிறை விடு காதைபக்கம் : 185

 
  மருள்படச் செய்யும் மாலைவந் துற்றது;
கதிர்மதி காணாக் காரிரு ளாட்சி
எதிர்மறைப் பொருளாய் எங்கும் படர்ந்தது;
`வந்தநம் ஆட்சியை வாழ்த்துவம் வாரீர்!
 
  இந்தநல் லாட்சியை எதிர்ப்பவர் ஈங்கிலை 65
  எதிர்ப்போர்க் காணின் ஒழிப்போம் வாரீர்!
மதிப்போம் மதிப்போம் மயங்கிரு ளாட்சி!
இருளின் ஆட்சி என்றும் வாழ்'கென
ஆந்தையும் கூகையும் அலறின! அலறின!
 
     
 

சிறையினுட் பூங்கொடி

 
     
  காரிரு ளாட்சியிற் கட்டுணும் மாந்தர் 70
  கூரிய நெடுவேல் கொளுவிய காவலர்
இருநிலம் மருவிய இருதிணை எனப்படும்
பொருள்கள் யாவும் புவிமிசைச் சோர்ந்தன;
நெஞ்சினை வருத்தும் நெடுந்துயர் ஒன்றும்,
 
  துஞ்சுத லொழிந்த துணைவிழி யிரண்டும், 75
  வஞ்சியின் மனத்து வளர்தமிழ் மூன்றும்,
சூழ்மதிற் சிறையினும் சோரா திருந்தன;
தாழ்குழல் ஆங்குத் தனியிருந் தனளே;
 
     
 

கதிரவன் தோற்றம்

 
     
  கொடுங்கோ லாட்சி நெடும்பகல் நில்லாது;  
  மடம்படு மாந்தர் மதியொளி பெறுங்கால் 80
  படும்படும் அந்தக் கொடும்பரின் ஆட்சி;
உயிர்வரின் உக்குறள் ஓடுதல் போலக்
கதிர்வர வறிந்து காரிருள் ஓடிப்
பதுங்கி மறைந்தது, பகலவன் வளர்ந்தான்;
 
     
 

அறமன்றத்தில் பூங்கொடி

 
     
  மறமிகு காவலர் வயங்கிழை தன்னை 85
  அறங்கூ றவையத்து நிறுத்தின ராகத்
திறம்பா வுரையினர் செவ்விய மனத்தினர்
கொல்போல் ஒருபாற் கோடா நடுவர்
 

---------------------------------------------------------------

  உயிர் - உயிரெழுத்து, உக்குறள் - குற்றியலுகரம், கோல் - தராசு.