பக்கம் எண் :

பக்கம் :186பூங்கொடி

 
  பால்போல் முகத்துப் பாவையை நோக்கிக்  
  குற்றஞ் சாற்றினர்; மற்றவள் மறுத்துச் 90
  `செற்றேன் அல்லேன் செந்தமிழ் ஆணை;
உற்றஇக் கொலையில் ஒருதொடர் பில்லேன்;
அற்றைப் பொழுதில் அவணிலேன் ஆதலின்
ஒன்றும் அறிகிலேன்; உண்மையிஃ' தென்றனள்;

 
  சிறைசெய் காவலர் சிற்சில வினவினர்; 95
  மறைசெய் தறியா மங்கையுஞ் செப்பினள்;  
     
 

கிழார் சான்று கூறல்

 
     
  அவ்வுழை வந்துறும் அரும்பெறற் செல்வர்
கவ்விய துயரினர் கலங்கிய விழியினர்
பெய்வளை விடுதலை பேணிய நிலக்கிழார்
 
  அவையம் நோக்கி `ஆயிழை இவள்தான் 100
  நவையறு செயலினள் நன்மனத் தாட்டி
கோதை இவட்கும் கோமகன் கொலைக்கும்
யாதும் தொடர்பிலை யான்நன் கறிவேன்;
கொலைநிகழ் பொழுதில் இலைஅவள் அவ்விடை
 
  என்மனை யகத்துள் இசையமு தளித்துப் 105
  பின்னிர விற்றான் பேதை மீண்டனள்'
என்னலும், நடுவர் எடுத்துரை கூறினர்;
 
     
 

நடுவர் தீர்ப்பு

 
     
  `மாமனை யகத்து மங்கை இசைத்ததை
ஆமெனக் கொள்ளுதும்; ஆங்கவள் மீண்டபின்
 
  கோமகன் கொலையுணல் கூடும் அன்றோ? 110
  மீளுமுன் நிகழ்ந்ததை மெய்ப்பிக்க ஒன்றிலை;
மூளும் பகையும் முனிவும் அவன்பாற்
கொண்டவள் இவளெனக் குறிப்புகள் ஈண்டுள;
சண்டிலி என்னுந் தையலுங் காண்கிலள்
 
  ஆதலின் இருவரும் அப்பெருங் கோமகன் 115
  சாதலைக் குறித்தனர் என்பதே சாலும்;
அன்றெனின்
இருவருள் ஒருவர் மற்றவர் செயலுக்
குறுதுணை என்பதே உறுதியாகும்;
 

---------------------------------------------------------------

  உயிர் - உயிரெழுத்து, உக்குறள் - குற்றியலுகரம், கோல் - தராசு.