|
| ஒறுத்தற் குரியர்'இவளும் அவளும் | 120 |
| சிறையகம் இம்மகள் செல்க; அம்மகள் மறைபுலம் நாடிச் சிறைசெயல் வேண்டும்'; | |
| | |
| பூங்கொடி மனத்துயர் | |
| | |
| தீர்ப்புரை பெற்றவள் சிறையகம் புகுவோள், யார்க்கொரு தீங்கும் இழைத்தே னல்லேன், | |
| என்மொழி காக்க ஏற்றிடும் பணியில் | 125 |
| புன்மையும் இன்னலும் புகுமேல் பொறுப்பேன், இறப்பே எனினும் சிரிப்புடன் ஏற்பேன் மறப்பரும் வன்பழி வாய்த்ததே! கெட்டேன்! எனப்பல நினைந்தே இரங்கினள் பூங்கொடி | |
| | |
| துருவன் துணிவு | |
| | |
| அறங்கூ றவையம் அளித்த தீர்ப்பும் | 130 |
| அறந்தேர் அரிவை அருஞ்சிறை பெற்றதும் செய்தி இதழ்கள் தெள்ளிதின் உரைக்க நையும் உளத்தினள் சண்டிலி கண்டு கொழுநற் குரைத்தனள்; கொலைசெய் துருவன் | |
| வழுவிலா அவட்கோ வந்ததிப் பழியெனக் | 135 |
| கழிபடர் உறுவோன், `கரந்துறை வாழ்வு நாமினி மேற்கொளல் நன்றிலை, அதன்றலை தூமொழி யுறுபழி துடைப்பது நம்கடன், காவலர் நம்மைக் காணா முன்னர் | |
| மேவுதும் அவையகம் விளம்புதும் வாய்மை' | 140 |
| என்பன கூறி இன்றுணை தன்னொடும் என்படும் படுக! எனுந்துணி வுடனே முற்பட அவையக முதல்வர்ச் சார்ந்து, | |
| | |
| துருவன் நிகழ்ந்தன கூறல் | |
| | |
| விளிவுறுங் கோமகன் நளியிருட் புக்கதூஉம்; | |
| ஒளிவுடன் செலலால் ஐயம் உற்றதூஉம், | 145 |
| அறியா வகையில் அவற்பின் தொடர்ந்ததூஉம், உரியவள் சண்டிலி உறைவிடம் அவன்புக் | |
--------------------------------------------------------------- |
| உயிர் - உயிரெழுத்து, உக்குறள் - குற்றியலுகரம், கோல் - தராசு. | |
| | |