பக்கம் எண் :

பக்கம் :188பூங்கொடி

 
  கழல்மிகு காம மொழிபல புகன்றதூஉம்,
தழலெனக் கொதித்துத் தான்சினங் கொண்டதூஉம்,

 
  கைதவன் அவனெனக் கருதித் தொலைத்ததூஉம், 150
  மெய்ம்மை தெரிந்து விரைந்தவண் பெயர்ந்ததூஉம்,
கொலைநிகழ் பொழுதத்துக் குலக்கொடி இலாததூஉம்
கலைமகள் அவட்கொரு களங்கம் இலாததூஉம்,
அஞ்சா தனைத்தும் எஞ்சா துரைத்து
 
  நெஞ்சால் மகிழ்வோன் நேரிழை பூங்கொடி 155
  விடுதலை வேட்டனன்; வியன்பே ரவையத்து
நடுநிலை பிறழா நடுவர் மகிழ்ந்து,
 
     
 

பூங்கொடி விடுதலை

 
     
  `முடிநிலை அறியா முதிர்ந்தெழும் உணர்ச்சியிற்
படுகொலை புரியினும் பாவை யிவட்குக்
 
  கெடுதலை விழையான் முடிவினைப் போற்றுவென்; 160
  இடுபழி ஏற்றவள் விடுதலை அடைகுவள்'
என்னலுந் துணையொடும் இளையோன் களித்தனன்;
நென்னல் மூடிய நெடுஞ்சிறைக் கதவம்
இன்னே திறந்தது; மின்னே ரிடையாள்
 
  பொன்னே அனையாள் பூங்கொடி மீண்டனள்; 165
  நன்னர் வினையே நாடிப் புரிவோர்க்
கின்னல் வரினோர் இமைப்பினில் இரியும்
என்னும் உண்மை இசைத்தது போல
 
  ஒலியிட் டாங்கண் ஒய்ந்ததக் கதவே. 169

---------------------------------------------------------------

  நென்னல் - நேற்று, நன்னர் - நல்ல, இரியும் - நீங்கும்..