| கிழார் முகமன் வேண்டா எனல் | |
|
| எனுமொழி கேட்ட கனிமொழிக் கிழவர் | 25 |
| `நனிமிக நல்லாய்! நானிலத் தின்றுதான் பெற்றோர் தமக்குப் பெறுமகள் நன்றி சொற்றது கேட்டேன்; மற்றவர் போல மதித்தனை கொல்லோ? உற்றவர் என்று | |
| குறித்தனை யாயின் விடுத்திடு முகமன்' | 30 |
| எனுமொழி கூறி இனிதிருந் தனரால்; | |
| | |
| அருண்மொழி அடிகளொடு வருதல் | |
| | |
| குலக்கொடி கோமகன் கொலைகுறித் தாளெனச் சிறைப்பட லாயினள் எனுங்கொடுஞ் செய்தி நாளிதழ் காட்ட நடுநடுக் குற்று | |
| வாளிற் போழ்ந்தென மனத்துய ரெய்திய | 35 |
| அன்னை யாகிய அருண்மொழி ஆங்கண் `என்னிளங் கொடிக்கோ இப்பழி நேர்ந்தது! வன்பழி சூட்டிய வன்கணர் எவரோ? தாய்மொழி காக்கும் வாய்மை மாந்தர் | |
| வீய்துயர் எய்தி வீண்பழிக் காட்படல் | 40 |
| விரிநீர் உலகத்து விதியோ' என்று சொரிநீர் விழியர் துயருறும் மொழியர் பெரியோ ராகிய பீடுயர் அடிகள் தாந்துணை யாகத் தடமனை சூழ்தரு | |
| வேங்கை நகரினை விரைந்தெய் தினளே; | 45 |
| | |
| விடுதலைப் பேறறிந்து மகிழ்தல் | |
| | |
| வீங்கிய துன்பினர் ஆங்கண் வினவிப் பூங்கொடி பழியிலள் பூட்டிய சிறையகம் திறந்தது, விடுதலை பிறந்தது, பண்பாற் | |
--------------------------------------------------------------- |
| முகமன் - மதிப்புச்சொற்கள், போழ்ந்து - பிளந்து, வன்கணர் - கொடியவர், துன்பினர் - துன்பத்தினர். | |
| | |