|
| வாழிய வாழிய வண்டமிழ்த் தொண்டே!' எனப்பல கூறி இயன்மொழி வாழ்த்து மனத்தொடு வாழ்த்தினர் மலையுறை யடிகள்; | |
| | |
| நிலக்கிழார்க்கு அறிமுகஞ் செய்தல் | |
| | |
| அவ்வுழை நிலக்கிழார் அணுகின ராகச் | |
| செவ்விய பூங்கொடி சென்னி தாழ்த்தி, | 80 |
| `ஈங்கிவள் என்னை ஈன்றவள் ஆவள் பாங்குயர் அருண்மொழிப் பெயரினள் ஐய! தாங்கிய துயரொடு தாயிவள் இருந்துழி நீங்கிட அத்துயர் நின்றருள் புரிந்தவர், | |
| குறளகம் என்னும் அருளகங் கண்டவர், | 85 |
| குறள்நெறி திறம்பாக் கொள்கையர் இவராம், கலைபல பரவ வழிபல கண்டவர் மலையுறை யடிகள் எனும்பெயர் மருவும் வரே எளியனை இத்துறைப் படுத்தினர், | |
| கவலை தவிர்ந்திட நல்வழி காட்டினர், | 90 |
| | |
| கிழாரை அறிமுகப் படுத்துதல் | |
| | |
| `வருக! வரு'கென வரவுரை கூறி | |
| இருகை கூப்பி இன்முகங் காட்டி | 95 |
| `அமர்க அமர்'கென அவ்வுழை அமர்த்தித் தமரென மகிழத் தாமும் இருந்தனர்; இருந்திடும் கிழவரை இருவர்க்கும் விளக்கினள்; `பெருந்தனம் உடையவர், பேணிய பண்பினர், | |
| விருந்தெதிர் கொள்ளும் விழைவினர், என்பால் | 100 |
| உழுவ லன்பும் உறவென எண்ணிப் | |
--------------------------------------------------------------- |
| சென்னி - தலை, தமர் - தம்மவர், உழுவலன்பு - ஒப்பற்ற அன்பு. | |
| | |