பக்கம் எண் :

கிழார்திறம் அறிந்த காதைபக்கம் : 193

 
  பழகும் பண்பும் கெழுமும் பெரியார்,
பொழுதெலாம் கலையிற் பொருந்தும் நெஞ்சினர்,
யாங்கணும் காண்கிலா ஓங்குயர் நூலகம்
 
  ஈங்கொன் றமைத்திட யான்விழைந் தியம்ப, 105
  மாபெரும் மாளிகை மனமுவந் தீந்தனர்,
சிறையகம் புகுந்துயான் துயருறுங் காலை
உறுதுணை யாகி உதவிய நட்பினர்,
விடுதலை பெற்று வெளிப்படூஉம் என்னை
 
  உடனழைத் திம்மனை உறைக என்றனர். 110
  முனம்மகள் இழந்த முதியவ ராதலின்
எனைமக ளென்றே எண்ணிடும் அருளினர்,
பெருநிலக் கிழாரெனும் பெயரினர் இவ'ரென
அனைத்தும் எடுத்துரைத் தாயிழை நின்றுழித்
 
     
 

நிலக்கிழார் வியப்பும் திகைப்பும்

 
     
  திகைத்தவ ணிருக்கும் தெரிவை அருண்மொழி 115
  முகத்தினை முகத்தினை முதியவர் நோக்கி
வியப்பும் திகைப்பும் விளங்கா ஐயமும்
மனத்தினுள் தோன்ற மயங்கி யிருந்தனர்;
 
     
 

அடிகளார் வினவுதல்

 
     
  இமையா நாட்டத் திருந்திடும் பெரியரை  
  அமைந்தநன் மனத்தர் அடிகளும் நோக்கி 120
  `அருண்மொழி யாகிய அரிவையின் முகத்தை
மருளுறப் பார்த்து மயங்கிய தென்னைகொல்?
அகத்துப் பொருதெழும் அளப்பருங் குழப்பம்
முகத்தினில் கண்டேன் முற்றவும் உணர
 
  எமக்கவை கூற இயலுமேல் இயம்புக! 125
  மனக்குறை மாறும் மற்றவர்க் குரைப்பின்
இனத்தவ ரென்றே எம்மையும் எண்ணுக!'
என்றுளங் கனிய இசைத்தன ராகக்