|
| கலக்கத்திற்குக் காரணம் | |
| | |
| கன்றிய மனத்துக் கலையறி கிழவர் | |
| `நன்றறி வுடைய நாவல ரேறே! | 130 |
| இன்றுநீர் இருவரும் எழுந்திவண் வரலால் தொன்று பழகிய தொடர்பும் உறவும் உடையேன் போல உள்ளங் களித்தேன்; காரண மில்லாக் கலக்கமும் முளைத்தது; | |
| யாரென அறியா அருண்மொழி யின்முகம் | 135 |
| பாரினில் நிகரிலை எனும்படி வாழ்ந்து கழிந்தஎன் நாளிற் படர்ந்த நினைவெலாம் சுழிந்து சுழிந்து தோன்றிடச் செய்தது; நங்கையின் குளிர்முகம் நாளெலாம் பழகிய | |
| துங்க முகம்போல் தோன்றுதல் கண்டேன் | 140 |
| பூங்கொடி முகமோ பூமியில் நாளும் ஏங்கிடச் செய்தஎன் இளமகள் முகம்போல் தேங்கெழில் பொங்கித் திகழ்வதுங் கண்டேன்; அடங்காக் களிப்பும் அறியாத் திகைப்பும் | |
| விளங்காத் துயரும் உளந்தனிற் கொண்டேன்;' | 145 |
| | |
| நிழற்படங்கணடு நிற்றல் | |
| | |
| என்றிவை கூறி `என்னுடன் வருக' என்றவர் தனியறை ஒன்றனைத் திறந்து, கிழாரும் அவர்மனைக் கிழத்தியும் இணைந்த வண்ணம் பொலியும் கண்கவர் எழிற்படம் | |
| முன்சுவர் தன்னிற் பொலிவது காட்டக் | 150 |
| கண்டஅம் மூவரும் கண்விழித் தயிர்த்தனர் விண்டிட அறியார் வியர்வியர்த் திருந்தனர்; மலைத்து நின்றிடும் மலையுறை யடிகள், | |
--------------------------------------------------------------- |
| தொன்று - பழமை, மனைக்கிழத்தி - மனைவி, விண்டிட - கூற, மலைத்து - திகைத்து. | |
| | |