பக்கம் எண் :

கிழார்திறம் அறிந்த காதைபக்கம் : 195

 
  கலைத்திறங் காட்டும் காரிகை படமும்,  
  நிலைத்துச் சிலையாய் நிற்பவள் முகமும், 155
  வேற்றுமை யின்றித் தோற்றுதல் கண்டு
கோற்றொடி முகத்தின் குறிப்பை நோக்கினர்;
அசையாப் பூங்கொடி, அன்னையின் முகமும்
நசைசேர் படத்தில் நங்கையின் முகமும்
 
  பெருநிலக் கிழாரின் பேசா முகமும் 160
  திரும்பத் திரும்பத் திகைத்து நோக்கினள்;  
     
 

அருண்மொழி வினாதல்

 
     
  அருண்மொழி விழியும் அருகினில் நிற்கும்
பெருநிலம் உரியவர் இருவிழி யும்புனல்
பெருகி வழிந்தது; பெரியரை நோக்கிப்
 
  `பெருமனம் உடையீர்! கிழத்தியின் பெயரை 165
  அருளுதி ராயின் ஆறுதல் பெறுவேன்'
இவ்வணம் அருண்மொழி இரைந்துரை கூறச்
 
     
 

நிலக்கிழார் மறுமொழி

 
     
  `செவ்விதின் அனைத்துஞ் செப்புவல் கேண்மோ!
கொவ்வை யிதழினள், கூரிய விழியினள்,
 
  கவ்வும் வகையாற் கனியிசைத் தொழிலாள், 170
  தென்னகம் பிறந்தவள், என்னகம் நிறைந்தவள்,
கன்னலின் அனையாள், காதல் மனையாள்
என்னிளம் பருவத்து முன்னம் ஒருநாள்
வாணிக முறையாற் காழகம் செல்வுழித்
 
  தோணியில் அவளுருத் துணைவிழி விருந்தாக் 175
  காணலும் என்னுளங் கவர்ந்தனள்; மறுநாள்
காழக நகரின் கலைதெரி அரங்கில்
ஏழிசை வல்லவள் இசையினைக் கேட்டேன்
காதலும் கலையும் கனிந்திடத் தனியிடம்
 
  குறித்துப் பலநாட் கூடிப் பழகிஅவ் 180
  வொருத்தியை மணந்தென் உயிரின் மேலா  

---------------------------------------------------------------

  கோற்றொடி - அருண்மொழி, நசை - விருப்பம், கனிஇசை - கனிந்த இசை, அனையாள் - போன்றவள், காழகம் - பர்மா.