|
| கலைத்திறங் காட்டும் காரிகை படமும், | |
| நிலைத்துச் சிலையாய் நிற்பவள் முகமும், | 155 |
| வேற்றுமை யின்றித் தோற்றுதல் கண்டு கோற்றொடி முகத்தின் குறிப்பை நோக்கினர்; அசையாப் பூங்கொடி, அன்னையின் முகமும் நசைசேர் படத்தில் நங்கையின் முகமும் | |
| பெருநிலக் கிழாரின் பேசா முகமும் | 160 |
| திரும்பத் திரும்பத் திகைத்து நோக்கினள்; | |
| | |
| அருண்மொழி வினாதல் | |
| | |
| அருண்மொழி விழியும் அருகினில் நிற்கும் பெருநிலம் உரியவர் இருவிழி யும்புனல் பெருகி வழிந்தது; பெரியரை நோக்கிப் | |
| `பெருமனம் உடையீர்! கிழத்தியின் பெயரை | 165 |
| அருளுதி ராயின் ஆறுதல் பெறுவேன்' இவ்வணம் அருண்மொழி இரைந்துரை கூறச் | |
| | |
| நிலக்கிழார் மறுமொழி | |
| | |
| `செவ்விதின் அனைத்துஞ் செப்புவல் கேண்மோ! கொவ்வை யிதழினள், கூரிய விழியினள், | |
| கவ்வும் வகையாற் கனியிசைத் தொழிலாள், | 170 |
| தென்னகம் பிறந்தவள், என்னகம் நிறைந்தவள், கன்னலின் அனையாள், காதல் மனையாள் என்னிளம் பருவத்து முன்னம் ஒருநாள் வாணிக முறையாற் காழகம் செல்வுழித் | |
| தோணியில் அவளுருத் துணைவிழி விருந்தாக் | 175 |
| காணலும் என்னுளங் கவர்ந்தனள்; மறுநாள் காழக நகரின் கலைதெரி அரங்கில் ஏழிசை வல்லவள் இசையினைக் கேட்டேன் காதலும் கலையும் கனிந்திடத் தனியிடம் | |
| குறித்துப் பலநாட் கூடிப் பழகிஅவ் | 180 |
| வொருத்தியை மணந்தென் உயிரின் மேலா | |
--------------------------------------------------------------- |
| கோற்றொடி - அருண்மொழி, நசை - விருப்பம், கனிஇசை - கனிந்த இசை, அனையாள் - போன்றவள், காழகம் - பர்மா. | |
| | |