|
| `துன்புளங் கொண்டோ தூமொழி புலம்பினை? | 210 |
| அன்புளம் துயரினை ஆற்றுதல் அரிதே!' என்பது கேட்ட இடருறும் அருண்மொழி | |
| | |
| முன்வரலாறு கூறுதல் | |
| | |
| `புலம்பினே னல்லேன் நிகழ்ந்ததை எண்ணிக் கலங்கினேன் பெரும! நலங்கிளர் பூங்கொடி | |
| நிலங்கிழார் மகண்முறை நேரிதின் உரியள், | 215 |
| மேலும் விளம்புவென் மேலவர் கிழத்தி கோலம் மிகுந்தவள் ஏலங் குழலி ஒருவயிறு தந்த உடன்பிறப் பாட்டி, சிறுபரு வத்தே செந்தமி ழிசையில் | |
| பெருகிய புலமையள் பேணும் புகழினள் | 220 |
| ஈழம் முதலா இசையமு தளிப்போள் ஆழி கடந்து காழகம் சென்றனள்; சென்றவள் இவரை ஒன்றிய மனத்து மன்றல் புரிந்தனள், மணிநகர் மறந்தனள்; | |
| காதலும் கலப்பும் கலந்தஇம் மணத்தைத் | 225 |
| தீதெனக் கடிகுவம் எனமனங் கொண்ட தவ்வை யவளென் தாய்க்கொரு முடங்கல் கவ்விய துயரொடு வரைந்தது தவிர யாண்டுளாள் என்பது யாதொன் றறியோம்; | |
| ஆண்டுபல வாயினும் அவள்நிலை சிறிதும் | 230 |
| அறிய கில்லேம், அரிவைநம் பூங்கொடி தெரியச் செய்தனள் பெரியவர் மகளிவள்' எனுமிவை யனைத்தும் இயம்பி நின்றனள்; | |
| | |
| உறவறிந்து மகிழ்தல் | |
| | |
| இனைதுயர் நீங்கிய இருநிலக் கிழவர் | |
| `மகளே மகளே வாவென் மகளே! | 235 |
--------------------------------------------------------------- |
| துன்புளம் - துன்ப உள்ளம், தூமொழி - அருண்மொழி, மகண் முறை - மகள்உறவு, நேரிதின் - நேர்மையாக, உடன்பிறப்பாட்டி - உடன்பிறந்தவள், ஈழம் - இலங்கை, மன்றல் - திருமணம், கடிகுவம் - கண்டிப்போம், தவ்வை - தமக்கை, வரைந்தது - எழுதியது, இனைதுயர் - வருத்தம். | |
| | |