|
| ஏலங் குழலிக் கிளையாள் மகளே! ஞாலம் பிழைக்க உழைக்கும் நங்காய்! உரிமை மகளே! உள்ளந் தழைக்க வருமென் மகளே வாவென் மகளே!' | |
| இருகை நீட்டி இவ்வணம் மொழிந்தனர்; | 240 |
| | |
| பூங்கொடி தொழுது மொழிதல் | |
| | |
| பொழிகண் ணீரினள் பூங்கொடி மகிழ்ந்து தொழுதடி வீழ்ந்து `விழுமிய அன்பால் எனைமக ளெனநீர் ஏற்றனிர் ஐய! முனம்நம துறவினைக் கனவிலும் அறியோம்; | |
| இயல்பினில் அம்முறை யிருந்திடப் பேற்றோம்; | 245 |
| மயல்தரும் துன்பம் மடிந்தது நம்மிடை; தந்தை யின்றித் தவிக்குமென் குறையும் நுந்தம் மகளிலா வெந்துயர்க் கொடுமையும் இன்றோ டொழிந்தன என்னுயிர்த் தந்தாய்' | |
| | |
| நிலக்கிழார் வாழ்த்துதல் | |
| | |
| என்றாள் கைம்மலர் இறுகப் பற்றித் | 250 |
| தம்மிரு விழியொடு சார்த்திச் சார்த்தி `இம்மையின் பயனை இன்றே நுகர்ந்தேன் நம்மையொன் றாக்கிய நற்றமி ழிசையை வாழ்க வாழ்கென வாழ்த்துவம் வாரீர்! | |
| வாழ்க மகளே! வாழிய தமிழ்!'என | 255 |
| வாழ்த்திய நிலக்கிழார் வண்டமிழ்த் தொண்டராம் மலையுறை யடிகள் மலர்முகம் நோக்கித் தலைதனைத் தாழ்த்தித் தகவுடன் வணங்கினர்; | |
| | |
| அடிகளார் வாயுறை வாழ்த்து | |
| | |
| `பெரியீர் வாழ்க! பேதைநும் மகளென | |
| உரியீர் வாழ்க! உறவும் ஓங்குக! | 260 |
| புதியநும் உறவு பொதுப்பணி புரியும் | |
--------------------------------------------------------------- |
| இளையாள் - தங்கை, மலர்முகம் - மலர்ந்தமுகம். | |
| | |