பக்கம் எண் :

கிழார்திறம் அறிந்த காதைபக்கம் : 199

 
  சிறியவட் குறுதுணை செய்தல் வேண்டும்;
இளங்கொடி! நினக்கொன் றியம்புதல் கடனாம்,
வளங்கொளும் இவரொடு வாய்த்தஇத் தொடர்பால்
 
  மகிழ்ச்சியில் மைந்துறும் மங்கைநின் பணியில் 265
  இகழ்ச்சி கொள்ளா திலங்குதல் வேண்டும்;
நம்மனோர் தந்தையும் தாயும் தமிழே,
அம்மொழிப் பணியே ஆற்றுதல் வேண்டும்
செம்மனக் கொடியே சீருடன் வாழிய!'
 
  எனவாங்கு 270
  வாயுறை வாழ்த்து வழங்கினர் அடிகள்;  
     
 

இருவரும் உறுதி கூறுதல்

 
     
  தந்தையும் மகளும் தாழ்ந்து பணிந்து
`முந்தை முறையில் முரண்பா டில்லை,
மொழிப்பணி புரிய முட்டொன் றில்லை
 
  விழிப்பொடு பணியில் நடப்பது திண்ணம், 275
  உளத்தெழும் உறுதி இசைத்தனம்' என்றனர்;  
     
 

அனைவரும் மணிநகர் மீளுதல்

 
     
  அடிகளும் அருண்மொழி அன்னையும் மகிழ்ந்து
கொடியிடை மகளை யிருவிழி குளிர
நோக்கி வாழ்த்துரை நுவன்றனர்; அன்பு
 
  தேக்கிய நிலக்கிழார் சின்னாள் உறைந்திட 280
  வேண்டின ராக வியநகர்த் தங்கிக்
காண்பன கண்டு களிப்புடன் நால்வரும்
சேண்படு மணிநகர் சேர்தல் வேண்டிப்
 
  பகலிற் போந்தனர் பயணங் குறித்தே. 284