26. யாழ்நூல் பெற்ற காதை |
வைகறைப் பொழுது |
|
| புலர்பொழு தத்து மலர்முகம் தோய்ந்து வருமிள மென்கால் வரவுரை கூறக் குறுமுகை தாங்கும் கொடியினம் பலவுடன் சிறுநகை காட்டிச் செடியசைந் தாடத் | |
| தளிர்பசும் புற்றலை தண்சிதர் உறைப்ப | 5 |
| நளிமலர் தோறும் நடம்புரி சுரும்பினம் பலபல தொக்குப் பண்ணொலி மிழற்றப் பலர்தொழ வரூஉம் பரிதியஞ் செல்வன் விரிகதிர் நீட்டி விண்வெளி விளக்கச் | |
| | |
| கோட்டை நகரில் தங்குதல் | |
| | |
| செறிதொடி அருண்மொழி சுரிகுழற் பூங்கொடி | 10 |
| தொடர்ந்துடன் பின்வரத் தொழுதகும் அடிகளும் படர்ந்தெழும் அன்பால் பழுநிய கிழாஅரும் கோட்டை நகரினைக் கூடின ராகிக் கோட்டமில் மனத்தர் கோனூர் வள்ளல் | |
| வீட்டினில் விருந்தாய் வேட்டுடன் புக்கனர்; | 15 |
| | |
| கோனூர் வள்ளலொடு கலந்துரையாடல் | |
| | |
| புக்கவர் தம்மைப் பொலிமுகங் காட்டித் தக்க இன்னுரை தந்துளம் மலர்ந்து மிக்க மகிழ்வால் மேம்படு வள்ளல் வருக வருகென வரவுரை கூறி | |
--------------------------------------------------------------- |
| மென்கால் - தென்றல், குறுமுகை - சிறுமொட்டு, சிதர் - துளிகள், உறைப்ப - சிதற, கரும்பினம் - வண்டுக்கூட்டம், தொக்கு - கூடி, மிழற்ற - இசைக்க, சுரிகுழல் - சுருள் கூந்தல், கிழாஅரும் - பெருநிலக்கிழாரும், கோட்டமில் - வங்சனை இல்லாத, வேட்டு - விரும்பி. | |
| | |