பக்கம் எண் :

யாழ் நூல் பெற்ற காதைபக்கம் : 201

  இருகை கூப்பி இருக்கை யளித்தனர்; 20
  பெருநிலக் கிழவரின் பெட்புறும் நண்பர்
இருநிதிக் கோமான் ஈகை மனத்தினர்
புலவர்க் குதவும் புரவலர், கரவிலர்
குலனருள் சிறந்த கோனூர் வள்ளல்
 
  நாட்படு நண்பரை நலமெலாம் வினவி, 25
  மீப்படும் அடிகள் வியனுல குய்ய
ஏற்றுள பணியும், இளங்கொடி யாகிய
பூங்கொடி மங்கை பூண்டுள பணியும்
தெள்ளிதின் நிலக்கிழார் தெரிப்பக் கேட்டுக்
 
  கள்ளவிழ் கோதையின் உள்ளத் துறுதியை 30
  நயந்தும் வியந்தும் நன்கனம் புகழ்ந்தும்
பயன்மிகு தொண்டினைப் பலபட வாழ்த்தி
வருவிருந் தோம்பி வளமனை யிருந்துழி,
 
     
  மயில்வாகனர்க்கு அறிமுகஞ் செய்தல  
     
  ஒருமனப் பாடும் ஓம்பிய நெறியும்  
  விரிமொழிப் புலமும் ஒருங்குடன் பெற்றார், 35
  உரனெனுந் தோட்டியால் ஓரைந் தடக்கி
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்,
குணமெனுங் குன்றின் கொடுமுடி நின்று
செயற்கருஞ் செயல்பல செய்திடும் பெரியார்,
 
  கற்றவர் குழுமும் கடல்சூழ் ஈழம் 40
  பெற்றவர், மொழிபல கற்றவ், நற்றவர்,
எழில்மயில் வாகனர் எனும்பெயர் பெற்றவர்
பொழிலிடைத் திகழும் வளமனை உற்றனர்;
 

---------------------------------------------------------------

  புரவலர் - காப்பாளர், கரவிலர் - வஞ்சனை இல்லாதவர், நாட்படு - பல நாள் பழகிய, மீப்படும் - புகழ்மிகும், தெள்ளிதின் - தெளிவாக, ஓம்பிய - காத்த,உரன் - அறிவு, தோட்டி - அங்குசம், ஓரைந்து - ஐம்புலன்கள், இருமை - நன்மை தீமை, அறம்பூண்டார் - துறவு மேற்கொண்டார், கொடுமுடி - உச்சி.