| வளமன வருமயில் வாகனர்க் காணலும் | |
| உளமுறு மகிழ்வால் உடனெழுந் தோடி | 45 |
| நல்வர வேற்ற நலங்கிளர் வள்ளல் அவணிருந் தோர்தம அறிமுகஞ் செய்தனர்; அவர்தமக் கிவர அறிமுகஞ் செய்தனர்; தாயும் அடிகளும் தயல்பூங் கொடியும் | |
| தோயும் மகிழ்வால் தொழுதனர் ஆங்கண்; | 50 |
| | |
| மயில்வாகனர் வாழ்த்துரை | |
| | |
| `பூங்கொடி ஏற்றுள பொதுப்பணி நாட்டில் ஓங்குயர் நலந்தரும் உயர்வுறும் நம்மொழி' எனமயில் வாகனர் ஏற்றம் உரைத்து மனமுறும் உணர்வால் வாழ்த்துரை கூறி, | |
| `இளங்கொடி யாகிய நலங்கிளர் பூங்கொடி! | 55 |
| விளங்குநின் பணிக்கு வியன்துணை யாக யாழ்நூல் என்னும் இந்நூல் பெறுக! | |
| | |
| யாழ்நூலின் சிறப்பு | |
| | |
| ஏழிரண் டாண்டுகள் இடர்பல துய்த்தும் ஏழிசை யாழின் இயற்றிறம் யாவும் | |
| நுண்ணிதின் ஆய்ந்து நுவல்வதிப் பெருநூல்; | 60 |
| நண்ணுமிம் முயற்சியில் நான்படு துயரம் எண்ணினும் உடலுளம் எல்லாம் நடுக்குறுஉம் ஆயிரம் ஆண்டுகள் அறியா வகையில் வீயுறும் நிலையில் வீழ்ந்து கிடந்த | |
| நற்றமிழ் யாழும் சொற்றமிழ் இசையும் | 65 |
| தெற்றென விளக்குந் திருவிளக் கிந்நூல் செந்தமிழ்க் கிஃதோர் சீர்சால் பொற்பணி இந்தநன் னினைவால் இடரெலாம் மறந்தேன்; | |
--------------------------------------------------------------- |
| நற்றவர் - நல்லதவத்தினர், அடிகள் - மலையுறை அடிகள், ஏற்றம் - பெருமை, வியன் - பெரிய, நடுக்குறூஉம் - நடுங்கும், பொற்பணி - அழகிய பணி. | |
| | |