| கோனூர் வள்ளலின் பேருதவி | |
| முற்படும் இப்பணி முற்றுறா முன்னர் | |
| எற்கொரு கொடுநோய் ஈண்டுவந் துற்றது; | 70 |
| நடத்தற் கியலா நலிவினுள் வீழ்ந்து படுத்துழன் றேனைப் பரிவுடன் அணுகித் தொடுத்திடும் இந்நூல் முடித்திட வேண்டிக் குலவிய நற்புகழ்க் கோனூர் வள்ளல் | |
| மலைநிகர் செல்வர் மனவளச் செம்மல் | 75 |
| இடனறிந் தாங்கண் உடனிருந் தருளிக் கடனுணர்ந் தாற்றிய கைம்மா றறியாப் பெரும்பே ருதவியின் பெற்றியை விளக்கக் கரும்பின் மொழியாய்! கண்டிலேன் ஒருசொல்;' | |
| | |
| பூங்கொடி யாழ்நூல் பெற்று மகிழ்தல் | |
| | |
| எனமொழிந் தவட்கொரு யாழ்நூல் ஈந்தனர்; | 80 |
| மனமிக மகிழ்ந்த மலர்க்கை ஏந்தித் தொழுது வாங்கினள் துடியிடைப் பூங்கொடி `முழுதுணர் பெரும! முத்தமிழ்த் தலைவ! பழுதறும் இந்நூல் படைத்தநும் ஆற்றல் | |
| தொழுதக வல்லது சொலுமுறை தெரியேன்; | 85 |
| தமிழிசைக் கிந்நூல் தற்காப் பாகும்; இமிழ்கடல் உலகில் இசைக்கோர் அணிகலன்; அமிழ்தம் பெற்றே னாகினென் வாழிய! | |
| | |
| பூங்கொடி புகழ வள்ளல் நாணுதல் | |
| | |
| கொடையாற் சிறந்த கோனூர் வள்ளல் |
| நடையாற் சிறந்த நம்மயில் வாகனர்க் | 90 |
| குற்றுழி உதவிய உயர்பெருந் தகைமையாற் கற்றவர் உலகம் கடப்பா டுடைத்து | |
--------------------------------------------------------------- |
| முற்றுறா - முடிவுறாத, எற்கு - எனக்கு, உழன்றேனை - வருந்திய என்னை, கடன் - கடமை, பெற்றி - தன்மை, துடியிடை - உடுக்கை போன்ற இடை, இமிழ்கடல் - ஒலிக்கும் கடல், நடை - ஒழுக்கம். | |
| | |