பக்கம் எண் :

பக்கம் :204பூங்கொடி

  நற்றவ முடையேன் யானும்' என்றனள்;
இவ்வுரை செவிமடுத் திருந்திடும் வள்ளல்
 
  செவ்விய மனத்தீர்! சிறியஎன் பணியால் 95
  எற்புகழ்ந் தேத்தல் இருவீர் தமக்கும்
பொற்புடைத் தன்று; புகழுரை தவிர்க!
செந்தமி ழன்னையின் சீர்சால் தவமகற்
கிந்தநற் கடன்செய இயைந்ததென் பேறாம்;
 
  யார்க்கது வாய்க்கும்? எற்கது வாய்த்தது! 100
  பார்க்குள் என்போற் பயன்பெற் றவரார்?
பெறலரும் பேறு பெற்றேன் போலப்
பெருமகிழ் வுறுமெனைப் பேணிநீர் புகழ்ந்தீர்!'
 
     
 

இருவர்க்கும் கடன்

 
   
  எனஇவை இசைக்க, இளமென் பூங்கொடி  
  `நுங்கடன் அஃதெனின் எங்கடன் இஃதாம்' 105
  எனும் மாற்றம் இறுத்தன ளாக
அனைவரும் களிப்பால் ஆர்த்து மகிழ்ந்தனர்;
 
   
 

யாழ்நூல் விளக்க வேண்டுதல்

 
   
  பனிமலர்க் கூந்தல் பைந்தொடி அரிவை
முனிவர் தம்பால் மொழிந்திவை வேண்டினள்
 
  `வாழ்நாள் அனைத்தும் வளரறங் காப்போய்! 110
  யாழ்நூல் முழுதும் நவையற உணரும்
ஆற்றல் உடையேன் அல்லேன் ஆதலின்
போற்றி அதன்றிறம் புகலுதி பெரும!'
என்பன கூறி இருந்தனள் ஆங்கண்;
 
   

யாழ்நூல் விளக்குதல் - யாழ்வகை, யாழுறுப்பு

   
  அன்புளங் கொண்டார் அவள்மொழிக் கிசைந்து 115
  `மன்பதைக் குணர்த்துதல் என்பணி யாகும்
மறைந்தஇக் கருவியின் மாண்புகள் யாவும்
திறந்தெரிந் துணர்வையேல் தெரிவைநின் பணிக்கே
 

---------------------------------------------------------------

  பார்க்குள் - உலகில், இறுத்தனள் - சொல்லினள்.