| அரண்செயும் ஆதலின் அறைகுவென்' எனமொழிந் | |
| தாயிரம் நரம்பான் அமைந்தநற் பேரியாழ் | 120 |
| தோயுறும் அமுதிசை பாய்வுறும் சீறியாழ் மீன்போல் வடிவம் மேவிய மகரயாழ் தேன்போல் நரம்பிசை தெரிக்கும் சகோடயாழ் முளரியாழ் வில்யாழ் முதலன விளக்கிப் | |
| பழகிய வீணையின் பான்மையும் உரைத்துப் | 125 |
| பண்ணுறும் யாழின் பல்வகை உறுப்பும் முன்னைய அமைப்பும் முற்றுற உணர்த்தி இலக்கியச் சான்றுகள் எடுத்தெடுத் திசைத்துக் குலக்கொடி மாதவி கோவலன் அருகில் | |
| கடற்கரை யமர்ந்து கானல் வரியாம் | 130 |
| மிடற்றிசை கலந்து மெல்விரல் வருடிய அவ்வியாழ்க் கருவியின் அமைப்பும் இயம்பிக் கவ்விசை நரம்புக் கருவி முதலாச் செவ்விய நால்வகைக் கருவியும் செப்பிச் | |
| | |
| இசைநூல் இசைத்தல் | |
| | |
| சிற்றிசை பேரிசை செயிற்றியம் குணநூல் | 135 |
| முற்றிய சயந்தம் முறுவல் எனப்பல சங்கத் திசைநூல் தனித்தனி சுட்டி, இங்கச் சுவடிகள் இழந்தவும் கூறி, | |
| | |
| பண்முறை விளக்கல் | |
| | |
| நண்ணும் இசைநூல் நலமெலாம் உணரப் | |
| பண்ணும் பண்ணியல் திறமும் பகர்ந்து | 140 |
| கண்புலர் காலை கடும்பகல் மாலை வெண்மதி இரவாம் வேளையில் இசைக்கும் பண்ணிவை, பொதுவிற் பாடும் பண்ணிவை, | |
--------------------------------------------------------------- |
| அரண்செயும் - துணைசெய்யும். தெரிக்கும் - இசைக்கும், முளரி - தாமரை, முற்றுற - முடிவுற. மிடற்றிசை - குரலிசை, நால்வகை - நரம்பு, தோல், துளை, கஞ்சம். | |
| | |