| இலக்கியத்தில் இசையுணர்த்தப் பூங்கொடி நன்றிபுகலுதல் | |
| | |
| நெஞ்சினை யள்ளும் செஞ்சொற் சிலம்பில் வேனிற் காதையும் வேட்டுவ வரியும் ஆனினங் காக்கும் ஆய்ச்சியர் குரவையும் பத்துப் பாட்டும் பரிபாட் டேடும் | |
| வைத்துக் கிடக்கும் பண்வகை வகுத்து | 150 |
| நாவின் அரசர் நலந்திகழ் பிள்ளை நாவலூர் நம்பியெனும் நற்றமிழ் வல்ல மூவர் அருளிய தேவா ரத்தொடு தேரும் செந்தமிழ்த் தேறல் மாந்திய | |
| மாறன் திருவாய் மலர்ந்தருள் மொழியும் | 155 |
| அருண கிரியார் அருள்திருப் புகழும் மருவிய பண்களில் வகையெலாம் தெரித்து, வாழிய பாவாய் வாழிய தமிழால்! | |
| வாழிய உலகம் வாழிய தமிழிசை! எனவாங்கு 160 | 150 |
| வாழ்த்தினர் எழில்மயில் வாகனர் அவளை; `வாழ்த்துக பெரும! வாழ்த்துக பெரும! காழ்ப்பும் பகையும் கடிதினில் விலகிப் பார்த்தலம் யாண்டும் பைந்தமிழ் பரவும் | |
| யாழ்நூல் என்னுமிவ் வோர்நூல் அளித்தனை | 165 |
| வாழ்நாள் அனைத்தும் வாழ்த்தி வணங்குவென்' | |
| என்றவள் வணங்கி இனிதிருந் தனனே. | 167 |
--------------------------------------------------------------- |
| நாவின் அரசர் - திருநாவுக்கரசர், பிள்ளை - திருஞானசம்பந்தர். நாவலூர் நம்பி - சுந்தரர், தேறல் - தேன், மாறன் - நம்மாழ்வார், காழ்ப்பு - பொறாமை, பார்த்தலம் - உலகம். | |
| | |