பக்கம் எண் :

பக்கம் : 207

27. அயல்நாடு சென்று வந்த காதை

மயில்வாகனர் பூங்கொடியை அயல்நாடுசெல்ல வேண்டுதல்

 

 

ஒப்பிலா யாழ்நூல் செப்பிய பெருமகன்
கப்பிய அன்பினால் கனிமொழி நோக்கிப்
`பூங்கொடி! நினக்கொன்று புகலுவ துடையேன்
ஆங்கிலம் முதலா அயன்மொழி யாவும்
 
  தீங்கற வுணர்ந்த தெளிதமிழ்ப் புலவரும் 5
  தொல்கலை பலவும் தொகுத்தவை ஆயும்
பல்கலைக் கழகத்துப் பணிபுரி பெரியரும்,
மொழிநூல் வல்ல முதுபே ரறிஞரும்,
நுழைபுலங் கொண்ட நுண்மாண் கலைஞரும்,
 
  உலக நாடுகள் பலவும் சென்று 10
  கொழிதமிழ்ப் பெருமையைக் கூட்டி யுணர்த்தவும்,
மொழியயற் கலைகள் முட்டின் றுணரவும்,
தம்முட் குழீஇத் தமிழ்த்தூ தேகக்
குறித்தனர் செல்வி!அக் குழுவினுள் நீயும்
 
  ஒருத்தி யாதலை உவந்ததென் மனனே; 15
  தமிழுக் கிஃதொரு தனிப்பே ராக்கம்
இமிழ்கடல் வரைப்பும் ஏத்தும்நின் புகழை
நின்னுளம் யாதென நிகழ்த்துதி அம்ம!'
 
     
 

மலையுறையடிகள் மனமிசைக எனல்

 
     
  என்னலும் அம்மகள் அன்னையை நோக்கி  
  முன்னுள அடிகள்தம் முகமும் நோக்கினள்; 20
  குறிப்புணர் அடிகள் கொடிக்கிவை கூறினர்;  

---------------------------------------------------------------

  கனிமொழி - பூங்கொடியை, நுழைபுலம் - ஆராயும் அறிவு, நுண்மாண் - நுண்ணிதாக மாட்சிமையுற்ற, கொழிதமிழ் - செழிக்கும் தமிழ், குழீஇ - கூடி, குறித்தனர் - கருதியுள்ளனர். வரைப்பு - உலகம், கொடிக்கு - பூங்கொடிக்கு.