27. அயல்நாடு சென்று வந்த காதை |
மயில்வாகனர் பூங்கொடியை அயல்நாடுசெல்ல வேண்டுதல் |
|
| ஒப்பிலா யாழ்நூல் செப்பிய பெருமகன் கப்பிய அன்பினால் கனிமொழி நோக்கிப் `பூங்கொடி! நினக்கொன்று புகலுவ துடையேன் ஆங்கிலம் முதலா அயன்மொழி யாவும் | |
| தீங்கற வுணர்ந்த தெளிதமிழ்ப் புலவரும் | 5 |
| தொல்கலை பலவும் தொகுத்தவை ஆயும் பல்கலைக் கழகத்துப் பணிபுரி பெரியரும், மொழிநூல் வல்ல முதுபே ரறிஞரும், நுழைபுலங் கொண்ட நுண்மாண் கலைஞரும், | |
| உலக நாடுகள் பலவும் சென்று | 10 |
| கொழிதமிழ்ப் பெருமையைக் கூட்டி யுணர்த்தவும், மொழியயற் கலைகள் முட்டின் றுணரவும், தம்முட் குழீஇத் தமிழ்த்தூ தேகக் குறித்தனர் செல்வி!அக் குழுவினுள் நீயும் | |
| ஒருத்தி யாதலை உவந்ததென் மனனே; | 15 |
| தமிழுக் கிஃதொரு தனிப்பே ராக்கம் இமிழ்கடல் வரைப்பும் ஏத்தும்நின் புகழை நின்னுளம் யாதென நிகழ்த்துதி அம்ம!' | |
| | |
| மலையுறையடிகள் மனமிசைக எனல் | |
| | |
| என்னலும் அம்மகள் அன்னையை நோக்கி | |
| முன்னுள அடிகள்தம் முகமும் நோக்கினள்; | 20 |
| குறிப்புணர் அடிகள் கொடிக்கிவை கூறினர்; | |
--------------------------------------------------------------- |
| கனிமொழி - பூங்கொடியை, நுழைபுலம் - ஆராயும் அறிவு, நுண்மாண் - நுண்ணிதாக மாட்சிமையுற்ற, கொழிதமிழ் - செழிக்கும் தமிழ், குழீஇ - கூடி, குறித்தனர் - கருதியுள்ளனர். வரைப்பு - உலகம், கொடிக்கு - பூங்கொடிக்கு. | |
| | |