| `பொறுப்புணர் மாந்தர் விருப்புடன் ஏற்கும் அறப்பணி யிஃதாம் ஆதலின் இசைகுவை! அலர்தொறும் அலர்தொறும் அஞ்சிறை விரித்துப் | |
| பலமுறை சுழன்று பசுந்தேன் உறிஞ்சி | 25 |
| நலம்நுகர் சுரும்புபோல் நாடொறும் முயன்று பலமொழி பயின்று பயன்றுய்த் தனையால்; ஆங்காங் கணுகி அவ்வவர் கலையும் ஓங்குயர் பண்பும் உணர்ந்தனை யாயின் | |
| புதுமைக் கலைகள் தமிழிற் பூக்கும், | 30 |
| அருமைத் தமிழும் அவ்விடை மலரும், உரிமை யனைத்தும் உன்மொழிக் கெய்தும், இதற்கொரு மறுப்பும் ஈன்றாள் உரையாள் எதற்கும் கலங்கேல் இசைந்தெழு மகளே'; | |
|
பூங்கொடி இசைந்தெழுதல் |
|
| இம்மொழி கேட்ட செம்மனப் பூங்கொடி | 35 |
| `நும்மொழி நடத்தல் நோன்பெனக் கொண்டுளேன்! நம்மொழி செம்மொழி நலம்பெறல் வேண்டி இல்லறம் என்னலம் இன்னன துறந்தேன்; நல்லறம் தமிழ்ப்பணி நாடொறும் இயற்றுங் | |
| குறிக்கோள் வழ்வினைக் கொண்டுளேன் அறிவீர்! | 40 |
| இறப்பினும் இப்பணி இயற்றியே இறப்பேன், என்மொழிக் குயர்வெனின் இன்னுயிர் ஈவேன், பன்மொழிப் பயிற்சி பைந்தமிழ் வளர்ச்சிக் கொருதுணை யாகுமென் றுன்னிப் பெற்றெனென், | |
| விரிநீர் உலகத்து வெளிநா டனைத்தும் | 45 |
| பரிவுடன் ஏகிப் பண்பும் கலையும் தெரிதர வுணர்ந்து தென்றமிழ்ப் பண்பெலாம் | |
--------------------------------------------------------------- |
| இசைகுவை - உடன்படுக, அலர் - மலர், அஞ்சிறை - உள்இறகு. ஒருதுணை - ஒப்பற்ற துணை, தெரிதர - தெரியுமாறு. | |
| | |