| புரிதர வுணர்த்திப் புதுமைக் கலைகள் ஆக்குவென் ஆக்குவென் அப்பெரு முயற்சியால் | |
| தேக்குவென் பெரும்புகழ் தீந்தமிழ் மொழிக்கே, | 50 |
| இன்னே எழுவேன் எனக்கேன் கலக்கம்? அன்னையும் வாழ்த்தி அனுப்புவள் என்னை; | |
|
அனைவரிடமும் விடை வேண்டுதல் |
|
| கண்டும் பாகும் கனியும் நிகர்க்கும் தண்டமிழ் காக்கும் தொண்டுளம் கொண்ட | |
| கோட்டை நகர்தரும் கோனூர் வள்ளலும், | 55 |
| பாட்டுள் புதைந்த பழம்பெரும் யாழை மீட்டும் கொணர்ந்த மேலவர் தாமும், உற்றுழி உதவி உறவின் முறையால் பெற்றோ ராகிய பெருநிலக் கிழவரும், | |
| தந்தையாய்த் தலைவராய்த் தாழ்விலாச் செல்வராய்ச் | 60 |
| செந்தமிழ் மைந்தராய்ச் சிந்தையில் தூயராய் வந்தருள் தந்தவர் வாய்மையில் நின்றவர் குறளகங் கண்ட குன்றுறை யடிகளும், அருளுளங் கொண்ட அனைவரும் வாழ்த்திப் | |
| பெருநிலம் யாண்டும் தரும்புகழ் நிறீஇ | 65 |
| வருகென உரைத்து வழங்குக விடையே' உரையிவை கூறி உவப்புடன் இருந்தனள்; | |
|
அருண்மொழியும் பிறரும் வாழ்த்துதல் |
|
| அயல்நா டேகும் அரிவையைத் தழுவிக் கயல்விழி அருண்மொழி கண்ணீர் மல்கி, | |
| `வெல்கநின் பணியே வெல்கநம் தமிழே, | 70 |
| செல்கநீ யாண்டும் செந்தமிழ்ப் பண்பைச் சொல்கநீ சொல்கநீ சோர்வுறேல் கண்மணி! பல்கலைப் பொருளும் பயில்கநீ' என்றனள்; | |
--------------------------------------------------------------- |
| புரிதர - புரியுமாறு, தேக்குவென் - நிறைப்பேன், இன்னே - இப்பொழுதே, மேலவர் - மயில்வாகனர், நிறீஇ - நிறுவி. | |
| | |