| ஆண்டுள பெரியரும் ஆயிழை வாழ்கென | |
| மூண்டெழும் உணர்வினால் மும்முறை வாழ்த்தினர்; | 75 |
|
பூங்கொடியின் அயல்நாட்டுச் செலவு |
|
| தமிழ்த்தூ தேகும் சான்றோர் குழுவினுள் புகழ்த்திரு மகளாம் பூங்கொடி சார்ந்து பயண மாகிப் பறந்தனள் வானில், அயலில் நின்றார் அனைவரும் மீண்டனர்; | |
| வானிற் பறந்தும் மரக்கலம் ஊர்ந்தும் | 80 |
| வேனிற் பருவம் விழுபனிப் பருவம் நானிலத் தோங்கும் நாடுகள் கடந்து கடந்தாங் காங்குக் கடமைகள் ஆற்றிப் படர்வோள் ஆயிடைப் பன்மொழிப் பயிற்சியும், | |
|
சான்மார் நாட்டில் பூங்கொடி |
|
| தமிழ்நூல் மாட்டுத் தணியா வேட்கையும், | 85 |
| நிமிர்மனச் செருக்கால் தமிழ்மொழி பழிப்போர் இமிழ்கட லுலகில் எவரே யாயினும் விருப்பும் வெறுப்பும் விடுத்துப் பழிமொழி மறுத்துரை வழங்கும் பொறுப்புணர் பண்பும், | |
| உடையவர் இளையவர் உலகறிந் தொழுகும் | 90 |
| நடையவர் சான்மார் எனும்பெயர்க் குரியவர் பெருந்துணை கொண்டு பெருநாட் டாங்கண் விருந்தின ளாகி வேண்டிய பொருள்கள் தெரிந்துளங் கொண்டு தெரிப்பன தெரித்துப் | |
|
கமிலர் நாட்டில் பூங்கொடி |
|
| பிறிதொரு நாடு பேணினள் செல்வோள் | 95 |
| அந்நாட் டாங்கண் அருந்திறல் அறிஞர் | |
--------------------------------------------------------------- |
| சான்மார் - ஜான்மார், இங்கிலந்து நாட்டறிஞர். தெரிப்பன -விளக்குவன. | |
| | |