| தென்னாட் டவர்போல் திகழும் இயல்பினர் தமிழின் நலந்தேர் தகவாற் பெரியர் கமிலர் என்னுங் கற்றுணர் சுவைஞரைக் | |
| கண்டுரை யாடிக் களிமகிழ் கூடித் | 100 |
| தொண்டொடு வாழ்வைத் தொடுத்தவள் இருந்தனள்; அவர்தாம் நறுந்தேன் மிதக்கும் நற்சுளை போல அருந்துவோர் நெஞ்சினை அள்ளும் சுவைசேர் | |
| செஞ்சொற் சிலம்பாம் செழுங்காப் பியமும் | 105 |
| விஞ்சுங் காதல் கொஞ்சும் வகையால் அஞ்சு திணையால் அமைந்தநற் கலியும் நாட்டுணர் வூட்டும் பாட்டுத் திறத்தால் கூட்டுணர் வூட்டிக் கொடுங்கோல் சாய்த்துத் | |
| தமிழுக் குய்வகை தந்தநற் பாரதி | 110 |
| அமிழ்தச் சுவைதேர் அருங்கவித் தொகுப்பும் அனையன பிறவும் அவர்மொழிக் கேற்றி இனியநற் பணிபுரி இயல்பினர், செயலினர்; கமிலர் நாட்டிற் கற்பன கற்றுத் | |
| தமிழர் நாட்டுத் தகவுகள் விளக்கி | 115 |
|
உருதின் நாட்டில் பூங்கொடி |
|
| மீள்வோள் உலகில் மேம்படு முறையால் ஆள்வோர் நாட்டினை அணுகினள், ஆங்கு மேலவர் கீழவர் வேற்றுமை யில்லை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஒருவரும் இல்லை, | |
| வறியரும் இல்லை உரியரும் இல்லை, | 120 |
| சரிநிகர் என்னும் சமநிலை கண்டனள்; உடைமைகள் யாவும் உலகப் பொதுமை | |
--------------------------------------------------------------- |
| கமிலர் - கமில்சுவலபெல், செக்கோசுலேவியா; நற்சுளை - பலாச்சுளை, அஞ்சுதிணை - ஐந்திணை, கூட்டுணர்வு - ஒருமைப்பாடு, தகவுகள் - தகுதிகள். | |
| | |