பக்கம் எண் :

பக்கம் :212பூங்கொடி

 

தடையிலை எனுநெறி தையல் கண்டனள்,
விண்வழிச் சென்று வெண்மதி கண்டு
 
  மண்ணிடை உலவும் மாந்தரும் கண்டனள், 125
  வெண்பனி சூழுமவ் வியன்பெரு நாட்டில்
நண்பும் பண்பும் நற்றமிழ்ப் பயிற்சியும்
மருவிய தோழர் மாசறு புலவர்
உருதின் என்னும் ஒருபெயர் மாற்றிச்
 
  செம்பியன் எனஒரு செந்தமி ழாக்கிய 130
  நம்பியைக் கண்டனள்; நலம்பல செறிந்த
அப்பெருந் தேஎத்துச் செப்புந செப்பி
நற்பொருள் பற்பல நாடித் தொகுத்துக்
 
     
 

ஏனைய நாட்டில் பூங்கொடி

 
     
  கற்பனைக் கெட்டாக் காலங் கண்ட  
  நற்றமிழ்ப் பணியே நாளெலாம் புரியும் 135
  பொற்றொடி நங்கை புதுமை வளர்தரும்
நாடுகள் சென்றனள் ஏடுகள் தேடினள்
பீடுறு தமிழ்ப்புகழ் கூடுதல் உறுதி
 
 

பூங்கொடி மீட்சி

 
  என்றுளம் மகிழ்ந்தே இருநீர்ப் பரப்பும்  
  துன்றிய நிலமும் தொலைவிண் வெளியும் 140
  கடந்து மீண்டனள் கலைபயில் செல்வி;
இடம்படு மணிநகர் யாண்டும் ஆர்ப்பொலி
படர்ந்திட வாழ்த்துரை பாவை ஏற்றனள்;
ஆயும் மலையுறை யடிகளும் பிறரும்
 
  தோயும் மகிழ்வால் துள்ளினர் உள்ளம் 145
  நாடுகள் தோறும் நடந்தன விளக்கி  

---------------------------------------------------------------

  தையல் - பூங்கொடி, உருதின் - ரூதின், உருசிய நாட்டறிஞர்; தேஎத்து - தேயத்தில், செப்புந -சொல்பவை, இருநீர்ப்பரப்பு - கடல்.