பக்கம் எண் :

பக்கம் :214

28. சொற்போர் நிகழ்த்திய காதை

பல்வகை எதிப்பு

 

 

பூங்கொடி யின்புகழ் யாங்கணும் ஒங்கிடத்
தாங்குதல் ஆற்றாத் தரியலர் புழுங்கி
ஏங்கிய மனத்தொடு எவ்வழி யாயினும்
ஆங்கவள் வளர்புகழ் அழிப்பான் வேண்டித்
 
  தீங்குகள் பலவும் செய்திடுங் குழுவும், 5
  தொலைவில் மறைந்து தூண்டுவோர் தூண்ட
அலையும் மனத்தினர் ஆடும் பாவைகள்
நிலையிலாக் கொள்கை கலையெனப் பூண்டோர்
மலையும் நோக்கினர் மதியிலார் குழுவும்,
 
  உண்மை நன்மை ஒன்றும் அறிகிலார் 10
  எண்ணும் ஆற்றல் எதுவும் அறிகிலார்
மனத்தால் தீமை மதித்தலும் அறிகிலார்
இனத்தால் நல்லவர் எனினும் அறிவெனும்
சுடரறி யாமல் சூழிருள் மூழ்கி
 
  மடமுறும் மனத்தினர் வஞ்சமில் குழுவும், 15
  மெய்ம்மை யுணர மேவுவார் குழுவும்,
தெய்வப் பணியால் உய்யும் குழுவும்
கொடுத்திடும் துயரெலாம் குலக்கொடி உதறினள்;
தொடுத்திடும் கணையென அடுத்தடுத் திருந்து
 
  விடுத்தனர் வினாக்கள் வெருவிலள் பூங்கொடி; 20
 

பிறமொழி வெறுப்பென்பார்க்குப் பூங்கொடி மறுப்பு

 

 

`பிறமொழி வெறுத்தல் பேதைமை யாகும்
அறமன முடையோர் அவ்வணம் செய்யார்
 

---------------------------------------------------------------

  தரியலர் - பகைவர், அழிப்பான் - அழிக்க, பாவைகள் - பொம்மைகள், மலையும் - தகராறுசெய்யும், உய்யும் - பிழைக்கும்.