| பிறமொழி தீதெனப் பேசலும் அறிகிலம் உரியநம் மொழியே உயர்வுறல் வேண்டி | |
| இரவும் பகலும் இடரிலும் முயல்வேம்; | 50 |
| யாதும் ஊரெனில் எம்முடை ஊரகம் தீதுறல் வேண்டுமோ? சீருறல் தீமையோ? யாவரும் கேளெனில் யாயுடன் தந்தையும் மேவருங் கேடுகள் மேவுதல் வேண்டுமோ? | |
| அன்னவர் நலம்பெற ஆர்வம் பூணுதல் | 55 |
| புன்மையோ? பகையும் பூத்திடல் என்னையோ? உலகப் புகழ்பெறு தலைவரும் கவிஞரும் பலகற் றடங்கிய பண்புயர் மாந்தரும் தாய்மொழி வேட்கை தணிந்திலர் துறந்திலர்; | |
| ஆய்புலப் பாங்கினர் அறிகுவர் இதனை; | 60 |
| தமிழின் பகைவர் சாற்றும் மொழியினை உமிழ்க! மெய்ம்மை உணர்க! எழுக' என்பன கூறி எழுச்சி யூட்டலும் மன்பதை சிந்தனை வளர்ந்தது மனத்தினில்; | |
| | |
இசைவாணர் எதிர்ப்பு |
| | |
| பாடும் துறையில் பழகிய மாந்தர் | 65 |
| தேடும் பொருளாற் சிறந்தோர் சிலர்தாம் கூடிச் சிலசொல் குறித்தனர் ஆங்கண்; `உள்ளம் உருக்கி ஒப்பிலா இன்ப வெள்ளம் பெருக்கும் வியன்பே ரிசையில் | |
| மொழியால் வேற்றுமை மூட்டுதல் நன்றோ? | 70 |
| இழிவாம் இச்செயல்; மொழியிங் கெதற்கு? குழுலும் யாழும் கொடுத்திடும் இசையில் மொழிஎது கண்டோம்? பழிஎது கண்டோம்? இசைவளந் தமிழில் யாண்டுக் கண்டோம்? | |
--------------------------------------------------------------- |
| யாய் - தாய், மேவரும் - விரும்பத்தகாத, புன்மையோ? - இழிவோ, என்னையோ? - ஏனோ?, தணிந்திலர் - அடங்கினாரிலர். | |
| | |