| இசையுணர் வுடையார் எம்மொழி யாயினும் | 75 |
| நசையுடன் ஏற்று நடப்பது கண்டோம்; மொழிவெறி விடுத்து முயல்வதே முறை'என வழிவகை கூறி வம்புகள் பேசினர்; | |
|
பூங்கொடி மறுமொழி - குயிலும் காகமும் |
| | |
| சினந்தெழும் உணர்ச்சியின் செற்றம் அடக்கி | |
| மனந்தெளிந் தரிவை மாற்றம் கொடுத்தனள்; | 80 |
| `கூவும் குயில்தன் குரலாற் பாடும்; காகம் தன்குரல் கொண்டே கரையும் இரவற் குரலைப் பெறுவது காணேம்; பறவையின் இயல்பைப் பகுத்தறி வுளநாம் | |
| அறிவதும் இல்லேம்; தெளிவதும் இல்லேம்; | 85 |
| நமக்குள மொழியை நாடுதல் தவிர்த்துப் பிறர்க்குள மொழியாற் பிதற்றுதல் உடையேம்; | |
| | |
ஊனுயிர் உருக்கும் பாட்டு |
| | |
| உருகும் இசையால் உள்ளம் என்றீர்! பொருளும் உணரப் புரியும் மொழியால் | |
| மருவிய பாடல் வழக்கும் இனிமையை | 90 |
| ஒருமுறை எண்ணுக! ஊனும் உயிரும் நெஞ்சுடன் கலந்து நெக்குநெக் குருகி விஞ்சுபே ரின்ப விளைவினில் திளைக்கும் | |
| | |
யாழும் குழலும் போதுமோ? |
| | |
| குழல்தரு மிசையில் மொழியிலை என்றீர்! | |
| அழகிது நும்மொழி; அவ்விசை சாலுமேல் | 95 |
| மிடற்றிசை வேண்டுமோ? வெறொரு மொழியில் தொடுத்திடும் பாடலும் தொகையுடன் பாடுவோர் கூட்டமும் வேண்டுமோ? குழல்முத லாகக் காட்டும் அவ்விசைக் கருவிசைக் கருவிகள் சாலுமே! | |
--------------------------------------------------------------- |
| செற்றம் - சினம், மாற்றம் - மறுமொழி, நெக்குநெக்குருகி - மிக இளகி, சாலுமேல் - போதுமெனில். | |
| | |