பக்கம் எண் :

பக்கம் :218பூங்கொடி

அயலிசை பாடுவோர்

     
  தமிழ்விழை யாரும் தம்வயிற் றுணவே 100

 

அமிழ்தெனத் தேடி அலைந்துழல் வாரும்,
உரிமை வாழ்வினைக் கருதகில் லாரும்
அடிமை வாழ்வினி லமைதி கொள்வாரும்
தமிழறி வில்லாத் தமிழருந் தாமே
 
  அயன்மொழி யிசையே அரங்கினிற் பாடுவர் 105
  மயலுணர் வுடையீர்! மற்றொன் றறைகுவல்  
 

தமிழிலா இசையில்லை?

     
  எம்மொழி யாயினும் இசையினி லேற்போர்
நம்மொழி ஒதுக்குதல் நன்றுடைச் செயலோ?
ஏற்போர் ஏற்க! இசையுணர் பெரியீர்!
 
  காற்கூ றறிவாற் கழறுதல் தவிர்க! 110
  இசைவளந் தமிழில் இலைஎனப் பிதற்றல்
வசையுமக் காகும்; வாய்மதம் ஒழிக!
முத்தமிழ் என்றொரு முறைவைப் புளதை
மெத்தவும் மறந்தீர்! மெய்ம்மையை இகழ்ந்தீர்!
 
  நெஞ்சறி பொய்யை நிகழ்த்துதி ராயின் 115
  பஞ்சென அதுதான் பறப்பதிங் கொருதலை;  
     

இதுவா மொழி வெறி?

     
  பழியுரை நாணாப் பண்புள பெரியீர்!
மொழிவெறி எனவொரு மொழியினைமொழிந்தீர்
உரிமை விழைவது வெறியெனக் கூறும்
 
  பெருமை நும்பால் உறைவது கண்டேன்; 120
  நரிமனம் இஃதென நவின்றிட நாணுவல்;
வெறியுணர் வுளதேல் விளைவன வேறு!
முறையொடும் அறிவொடும் முறையிடு கின்றோம்;
நெறியறிந் தொழுகும் நேர்மையை வியந்திலீர்!
 
  புரைபடும் நும்முளம் புலப்படச் செய்தீர்! 125

---------------------------------------------------------------

  காற்கூறு - கால்பங்கு, வாய்மதம் - வாய்ச்செருக்கு.