| செந்தமிழ் மொழியொடு செற்றம் என்கொலோ? வந்துடன் தாய்மொழி வளர்த்திடக் கூடுக! முந்துநம் தமிழிசை மொய்ம்புறப் பாடுக!' செவ்விதின் இவ்வணம் செப்பின ளாக | |
| அவ்விய நெஞ்சினர் ஆங்காங் கமைந்தனர்; | 130 |
|
தமிழ் வழிபாட்டுக் கெதிர்ப்பு |
| | |
| `வழிபடு துறையிலும் வண்டமிழ் வேண்டுதும்; இழிநிலை போதும்; இறைவன் திருமுனர் எம்முயர் மொழியே இசைத்திடல் விழைகுதும்` இம்மொழி கேட்டோர் எரியெனக் கனன்றனர்; | |
| `கோவிலில் தமிழா? கொடுமை! கொடுமை! | 135 |
| நாவினில் இதுசொல நடுக்குறூஉம் எம்முளம்! முன்னோர் நம்மினும் முழுமதி யுடையர் அன்னோர் நெறியினை அழித்திட முயல்வதோ? முந்திய மொழிகளுள் மூத்ததே ஆயினும் | |
| மந்திர வலிமை செந்தமிழ்க் குளதோ? | 140 |
| இடமிகு கோவிலுள் இறைவன் முன்னர்க் கடவுண் மொழியே கழறுதல் வேண்டும்; மந்திர மொழியாம் மறைமொழி விடுத்துச் செந்தமி ழோதின் தெய்வம் உவக்குமோ?` | |
| தேவரின் தூதுவர் ஏவலர் போலிவை | 145 |
| கூவினர்; மேலவர் கொள்ளும் வகையாற் சான்றுடன் மறுமொழி சாற்றுவள் பூங்கொடி; | |
| | |
முன்னோர் நெறிதான் |
| | |
| `ஈன்றவட் பழிக்கும் இயல்பினை ஏன்றுளீர்! தமிழக வரைப்பில் தாய்மொழி ஆட்சி | |
| திகழுதல் வேண்டும்; தேவுறு கோவில் | 150 |
| விலக்குடைத் தன்று; மயக்குறல் என்கொல்? கலைக்கோர் உறைவிடம் கட்டியோர் தமிழர் | |
--------------------------------------------------------------- |
| ஏன்றுளீர் - ஏற்றுள்ளீர். | |
| | |