| உள்ளுறை கடவுளும் உரியவர் நமக்கே அள்ளுற வணங்குவோர் அயலவர் அல்லர் | |
| இறைவினை புரிவோர் ஏதிலர் அல்லர் | 155 |
| முறைஎது? வழிபடு மொழிஎது? புகல்வீர்! முன்னோர் நெறியினில் முரண்பா டென்றீர்! முன்னோர் யாரென முடிந்த முடிபாச் சொன்னோர் யாரே? முன்னோர் அவரினும் | |
| முற்பட வாழ்ந்தவர் எப்பெய ருடையார்? | 160 |
| அப்பெரு முன்னோர் ஆண்டவன் மாட்டுச் செப்பிய மொழிஎது? செந்தமி ழன்றோ? திருவாய் மொழியெனத் திருவா சகமென இறைவா! இறைவா! என்றவர் ஓதிய | |
| திருவாய் மொழிஎது? தீந்தமி ழன்றோ? | 165 |
| அவரெலாம் முன்னோ ரல்லரோ? இறைவன் செவிதனில் அம்மொழி சேர்ந்ததும் இலையோ? | |
|
மந்திர வலிமை தமிழ்மொழிக்குண்டு |
| | |
| அரவணி இறைவனை ஆரூர் நம்பி இரவிடைப் பரவைபால் ஏவிய தெம்மொழி? | |
| இடங்க ருண்ட இளஞ்சிறு மகனை | 170 |
| உடம்பொடும் உயிரொடும் உய்வித்த தெம்மொழி? ஒடுங்கிய எலும்பினை உருவெழில் குறைவிலா மடந்தையின் வடிவா மாற்றிய தெம்மொழி? அருமறை வினைஞரால் அடைபடு கதவம் | |
| திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி? | 175 |
| கணிகணன் முன்செல மணிவணன் அடியிணை பணிதிரு மழிசையர் பதறினர் பின்செலப் படப்பாய் அணைமேல் பாற்கடல் மிசையே கிடப்போன் தன்மனைக் கிழத்தியும் உடன்வர | |
--------------------------------------------------------------- |
| அள்ளுற - வாயுற, ஆரூர் நம்பி - சுந்தரர், பரவை - பரவை நாச்சியார், இடங்கர் - முதலை, கதவம் - கதவு. | |
| | |