| அரவணைச் சுருட்டோ டாங்கவர் தொடர்ந்து | 180 |
| பரிவுடன் ஓடப் பண்ணிய தெம்மொழி? அம்மொழி நம்மொழி அத்துணைப் பெருமையும் செம்மையின் எமக்கெலாம் செப்பியோர் நீவிர் இன்றிவை மறந்தீர்! எதிர்ப்புரை கிளந்தீர் | |
| கன்றிய மனத்தாற் கரவுரை புகன்றீர் | 185 |
| மந்திர வலிமை செந்தமிழ்க் கிலையெனில் இந்தநல் லருஞ்செயல் எவ்வணம் இயலும்? | |
|
கடவுளர் விரும்பும் மொழி |
| | |
| கடகரி உரியன் கடும்புலி யதளன் சடையினை மறைத்து மணிமுடி தரித்து | |
| விடைக்கொடி விடுத்துக் கயற்கொடி எடுத்து | 190 |
| விடவர வொழித்து வேம்பலர் முடித்துத் தொடுகழல் மாறன் வடிவொடு வந்ததூஉம், மடவரல் மனையாள் மலைமகள் உமையாள் தடாதகைப் பெயரினைத் தாங்கி வந்ததூஉம், | |
| மயில்மே லமர்வோன் அயில்வே லுடையோன் | 195 |
| எழில்சூழ் மதுரை எழில்நக ரதனுள் உக்கிர குமர னுருவொடு வந்ததூஉம், தெக்கண மொழியாம் தீந்தமிழ்ச் சுவையைக் கூட்டுண வெழுந்த வேட்கையால் என்றே | |
| பாட்டினில் குருபரர் பாடி வைத்தனர்; | 200 |
| வடக்கினில் நின்றோன் வரன்முறை யாகக் கடுக்கவின் கண்டன் தென்றிசை நோக்கி அடுக்க வந்துவந் தாடுதல் ஏனெனின் | |
--------------------------------------------------------------- |
| சுருட்டு - (படுக்கைச்) சுருள், கரவுரை - வஞ்சனை மொழி, கடகரி - மதயானை; உரியன், அதளன் - தோலாடையன், விடைக்கொடி - எருதுக்கொடி, வேம்பலர் - வேப்பம்பூ, மாறன் - பாண்டியன், மடவரல் - இளமைமிகும், குருபரர் - குமரகுருபரர், கடுக்கவின் - நஞ்சின் அழகு, கண்டன் - கழுத்தினன். | |
| | |