| தொடுக்கும் பழந்தமிழ்ச் சுவையினை மாந்தவே, | |
| அறைந்தனர் இவ்வணம் அருட்பரஞ் சோதி; | 205 |
| கண்ணுதற் கடவுள் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்து பசுந்தமிழ் ஆய்ந்தனன்; வாத வூரன் ஓதிய வாசகம் தீதுறா வண்ணம் தென்னா டுடைவன் | |
| ஏட்டில் எழுதி நாட்டிற் களித்தனன்; | 210 |
| அர்ச்சனை பாட்டே ஆதலின் நம்மைச் சொற்றமிழ் பாடெனச் சுந்தரன் றன்பால் பற்றுடன் சென்று பைந்தமிழ் வேண்டினன்; வழிபடு தமிழை விழைகுவர் இறைவரென் | |
| றெழிலுற உணர்த்திட இவையிவை சான்றாம்; | 215 |
| முன்னோர் சொன்ன முடிபினைக் கொள்க! பின்னோர் நம்மைப் பேணுதல் வேண்டும்` சொற்போர் இவ்வணம் பற்பல நிகழ்த்திக் கற்போர் மற்றோர் களிப்பாற் போற்ற | |
| மாந்தர் மனத்தில் மதியொளி ஏற்றினள்; | 220 |
|
ஆள்வோர்க்கு அறிவுரை |
| | |
| ஏந்தும் புகழ்சூழ் இளங்கொடி துணிவுடன் அரசியல் ஆயத்து முறைபுரி வோர்க்கும் குறையெலாம் உரைத்தனள் உரிமையும் வேண்டினள் `துறைதொறும் துறைதொறும் தூயநற் றமிழே | |
| ஆட்சி புரியும் மாட்சிமை வேண்டும் | 225 |
| ஆட்சியின் பெயரால் அயன்மொழி புகுதலைச் சான்றோர் வெறுப்பர் தமிழகம் மறுக்கும் ஆன்றமைந் தடங்கிய அறவோர் கொதிப்பர் ஆதலின் அரசியல் ஆயத் துள்ளீர் | |
| மேதகு பெரியீர் ஆவன புரிக' | 230 |
| என்று பலகால் எடுத்தெடுத் திசைத்தும் | |
| நன்று புரிந்திட நயந்திலர் அவரே. | 232 |
--------------------------------------------------------------- |
| பரஞ்சோதி - திருவிளையாடற் புராண ஆசிரியர், கழகம் - தமிழ்ச்சங்கம், வாதவூரன் - மாணிக்கவாசகர். | |
| | |