பக்கம் எண் :

பக்கம் : 223

29. அறப்போர் நிகழ்த்திய காதை

முத்தமிழ் மாநாடு

     
  கலைமிகு தமிழ்மொழி காக்கும் நோக்கோடு  
  மலையுறை யடிகள் மாநாடொன்று
மணிநக ரென்னும் மாநக ரதனுள்
அணிபெறக் கூட்டினர்; அப்பே ரரங்கில்
 
 

பன்னாட்டறிஞர் பாராட்டுரை

     
  பைந்தமி ழுணர்ந்த பற்பன் னாட்டினர் 5
  ஐந்தெனும் இலக்கண அமைப்புறும் செந்தமிழ்
மேன்மையைப் பான்மையை மேம்படு புலத்தால்
ஆய்ந்தவை கூறி அதன்நலம் பரப்ப
வாய்ந்தவும் உரைத்துத் தோய்ந்தனர் களிப்பில்;
 
  பன்னாட் டிசையும் பகுத்துணர்ந் தாய்ந்தோர் 10
  தென்னாட் டிசையின் திறமெலாம் வியந்தே
எந்நாட் டெங்கணும் இதுபோற் காண்கிலேம்
எனஅவர் தம்முள் ஒருசிலர் உரைத்தனர்;
குவளை நிகர்க்கும் கூர்விழி யிணையால்,
 
  பவழ இதழால், பைந்தளிர் விரலால், 15
  பொற்புடை நுதலால், புருவச் சிலையால்,
உட்குறிப் புணர்த்தும் மெய்ப்பா டனைத்தும்
தெற்றென விளக்கித் தெரிவையர் ஆடுங்
கலையெழிற் றிறமெலாம் பலபடப் புகழ்ந்தனர்;
 
 

தென்னாட்டார் தெளிவுரை

     
  முத்தமிழ் காவலர், மொழித்துறை ஆய்வினர், 20
  புத்தமு தென்னப் புதினம் படைக்குநர்,
செந்தமிழ்க் காவலர், சிந்தனைப் புலவர்,
பைந்தமிழ் நாவலர், பன்மொழிப் புலவர்,
 

---------------------------------------------------------------

  உட்குறிப்பு - மனக்குறிப்பு.