29. அறப்போர் நிகழ்த்திய காதை |
முத்தமிழ் மாநாடு |
| | |
| கலைமிகு தமிழ்மொழி காக்கும் நோக்கோடு | |
| மலையுறை யடிகள் மாநாடொன்று மணிநக ரென்னும் மாநக ரதனுள் அணிபெறக் கூட்டினர்; அப்பே ரரங்கில் | |
|
பன்னாட்டறிஞர் பாராட்டுரை |
| | |
| பைந்தமி ழுணர்ந்த பற்பன் னாட்டினர் | 5 |
| ஐந்தெனும் இலக்கண அமைப்புறும் செந்தமிழ் மேன்மையைப் பான்மையை மேம்படு புலத்தால் ஆய்ந்தவை கூறி அதன்நலம் பரப்ப வாய்ந்தவும் உரைத்துத் தோய்ந்தனர் களிப்பில்; | |
| பன்னாட் டிசையும் பகுத்துணர்ந் தாய்ந்தோர் | 10 |
| தென்னாட் டிசையின் திறமெலாம் வியந்தே எந்நாட் டெங்கணும் இதுபோற் காண்கிலேம் எனஅவர் தம்முள் ஒருசிலர் உரைத்தனர்; குவளை நிகர்க்கும் கூர்விழி யிணையால், | |
| பவழ இதழால், பைந்தளிர் விரலால், | 15 |
| பொற்புடை நுதலால், புருவச் சிலையால், உட்குறிப் புணர்த்தும் மெய்ப்பா டனைத்தும் தெற்றென விளக்கித் தெரிவையர் ஆடுங் கலையெழிற் றிறமெலாம் பலபடப் புகழ்ந்தனர்; | |
|
தென்னாட்டார் தெளிவுரை |
| | |
| முத்தமிழ் காவலர், மொழித்துறை ஆய்வினர், | 20 |
| புத்தமு தென்னப் புதினம் படைக்குநர், செந்தமிழ்க் காவலர், சிந்தனைப் புலவர், பைந்தமிழ் நாவலர், பன்மொழிப் புலவர், | |
--------------------------------------------------------------- |
| உட்குறிப்பு - மனக்குறிப்பு. | |
| | |