பக்கம் எண் :

பக்கம் :224பூங்கொடி

  பல்பொரு ளுணர்ந்த பண்டகர், அருள்நெறி  
  மல்கிய துறவற மாண்பினில் உறையுநர், 25
  குறள்நெறி ஓம்பிக் குடியர சோங்க
அறநெறி காக்கும் அரசியல் அளிஞர்,
பிறபிற கட்சிகள் பேணுநற் றலைவர்,
பல்வகைச் சமயப் பாங்கினில் ஓங்கிய
 
  நல்வகைப் பொருளுணர் நற்றமிழ் வல்லவர், 30
  இசையின் அரசர், ஏழிசை வல்லவர்,
நசைமிகு திரைப்பட நடிகர், பல்வகை
ஏடுகள் நடாத்தும் இயல்பினர் யாரும்
கூடினர் தத்தம் கோட்பா டனைத்தும்
 
  நாடும் வகையால் நன்கனம் விளக்கினர்; 35
  அவரவர் கோட்பா டறைந்தன ராயினும்
தவறியும் தமிழின் தன்மை குறைத்திலர்;
வழியும் முறையும் வகைபல வாயினும்
மொழியின் உயர்வே முன்னினர் அவர்தாம்;
 
 

நான்கு முடிபுகள்

     
  கவரும் முறையால் கனிமொழி காக்க 40
  அவரவர் நோக்கில் அறைந்தவை யாவும்
உவகையிற் கேட்ட உயர்பே ரடிகள்
தொகுத்தவை கூட்டி வகுத்தனர் நால்வகை;
`இருப்பவை யனைத்தும் உருச்சிதை யாமற்
 
  கருத்துடன் பேணிக் காத்திடல் வேண்டும்; 45
  இருப்பது போதும் எனநினை யாமல்
புதுப்புது நூல்கள் படைத்திடல் வேண்டும்;
அயன்மொழி புகுத்திவண் அல்லல் கொடாஅவகை
மயலர வொழிந்து மதியினைத் துலக்கித்
 
  தடுத்துக் காக்கும் தறுகண் வேண்டும்; 50
  பொற்புடை நுதலால், புருவச் சிலையால்,
உட்குறிப் புணர்த்தும் மெய்ப்பா டனைத்தும்
தெற்றென விளக்கித் தெரிவையர் ஆடுங்
கலையெழிற் றிறமெலாம் பலபடப் புகழ்ந்தனர்;
 

---------------------------------------------------------------

  பண்டகர் - டாக்டர் பட்டம் பெற்றவர், நடாத்தும் - நடத்தும், கோட்பாடு - கொள்கை, மயலரவு - மயக்கம், தறுகண் - துணிவு.