பக்கம் எண் :

அறப்போர் நிகழ்த்திய காதைபக்கம் : 225

  தொடுக்கும் தமிழ்க்குத் துறைதொறும் ஆட்சி
கொடுத்திடல் வேண்டுமென் றடிகள் கூறினர்;
 
 

பூங்கொடியின் மகிழ்ச்சி

     
  பூங்கொடி யாகிய பொற்றொடி நங்கை
ஆங்கண் எழுந்தனள் அவள்சில மொழிந்தனள்;
 
  `சமயம் கட்சி சாதியோ டரசியல் 55
  அமையுந் தொழிலால் ஆர்த்தெழு பகைமை
இமயம் போலது எதிருள தாயினும்
கருதா ததனைக் கடிதினில் ஒதுக்கி
ஒருதாய் மக்கள் உணர்வே ஓங்கி
 
  வருகை புரிந்தீர் வாழிய பெரியீர்! 60
  நெடுநாட் கனவை நினைவெனச் செய்தீர்!
பிறப்பால் வழக்கால் பேசும் மொழியால்
இனத்தால் தமிழர் எனுமொரு நினைவே
கருத்தாற் கொண்டுளோம் காலம் நமதே!
 
  தாய்மொழி காக்கும் தணியா வேட்கை 65
  சேய்கள் நம்பாற் செம்மையிற் கிளர்ந்தது;
வாகையும் சூடுவோம் வளர்தமிழ் பாடுவோம்
ஓகையில் ஆடுவோம் ஓங்குக ஓங்கவே!'
 
 

இனி ஆற்றவேண்டிய பணி

     
  `நாடொறும் நாடொறும் நாடெலாம் போந்து  
  பாடியும் பேசியும் பட்டி மன்றத்துச் 70
  சொல்லமர் ஆடியும் சொல்வன சொல்லி
நல்லதோர் ஆர்வம் நாட்டிடை மூட்டவும்
மொழியுணர் வூட்டவும் முயன்றனம்; பொங்கிப்
பொழியும் ஆர்வமும் புத்துணர் வெழுச்சியும்
 
  பெருக்கெடுத் தோடும் பெற்றிமை கண்டோம்; 75
  உருக்கொள அதுதான் ஒருநெறிச் செல்லத்  

---------------------------------------------------------------

  ஓகை - உவகை, நாடொறும் - நாள்தோறும்.