பக்கம் எண் :

பக்கம் :228பூங்கொடி

  ஒருமொழி யாக ஓங்குதல் ஒருதலை'  
  என்றுரை யாற்ற, ஈண்டிய பெரியோர்
நன்றுநன் றென்றே நயந்தனர் ஆர்த்தனர்;
125
 

அடிகளார் போர்முழக்கம்

     
  மன்றினில் இருந்த மலையுறை யடிகள்
ஒன்றிய உணர்ச்சியும் உள்ளத் தெழுச்சியும்
துன்றிய மனத்தராய் நன்றுணர் புலவோர்
 
  குழுவுடன் ஆய்ந்து வழிமுறை தெரிந்து 130
  குழுபல அமைத்துக் கூறினர் சிலசொல்
`தென்மொழி நிலைமை தெற்றென விளக்கி
மன்பதைக் குரைத்தோம்; மன்பதை சார்பில்
எவ்வெவ் வகையால் இயம்புத லொல்லுமோ
 
  அவ்வவ் வகையால் ஆள்வோர்க் கியம்பியும் 135
  தாய்மொழிக் குரிமை தந்திலர் அதனால்
ஆய்ந்தபின் அறப்போர் ஆற்றத் துணிந்தனம்;
போரிட முனைந்து புகுவோர் கேண்மின்!
ஆருயிர் கொடுப்ப தறப்போ ராகும்
 
  வேறுயிர் எடுப்பது மறப்போ ராகும்; 140
  அதனதன் பெற்றிமை அறிகதில் லம்ம!
முதற்போர் புரிய முனைந்தனம் இன்றே;
போரெனில் உயிர்பல போதலும் இயல்பே;
சீரிய இப்பெரும் போரினில் புகுவோர்
 
  யாரென யாரென இயம்புதிர் இன்றே; 145
  இருப்பதும் ஓருயிர் இறப்பதும் ஓர்முறை
தடுத்திட ஒல்லுமோ? சாவதும் ஒருதலை;
விடுக்குமவ் வோருயிர் வீணிற் செலவிடா
தடுத்தநம் தாய்மொழி அரியணை வீற்றிடத்
 
  தொடுத்திடும் போரில் விடுத்திடத் துணிக! 150
  துணிவோ ரெவரோ அவரே வருக!
துணிவில ராயின் தொலைவிற் செல்க!
 

---------------------------------------------------------------

  நங்கடன் - நம்கடமை, பாட்டு - பத்துப்பாட்டு, தொகை - எட்டுத்தொகை நூல்.