பக்கம் எண் :

அறப்போர் நிகழ்த்திய காதைபக்கம் : 229

நாட்டவர்க்கு வேண்டுகோள்

     
  செல்வோர் தாமும் செய்வதொன் றுளது
வெல்போர் கருதி விடுதலைப் படையினர்
 
  சிறையகம் புகுந்தும் உறுதுயர் அடைந்தும் 155
  கையுங் காலும் மெய்யும் சிதைந்தும்
நையும் உயிரொடு நடைப்பிண மாகியும்
ஆளுநர் செயலால் அல்லற் பட்டுழிக்
கோளும் குறையும் கூறித் திரியாது
 
  கண்ணீர் ஒருதுளி காட்டுக; இலையெனில் 160
  உண்ணிறை பரிவொடும் ஒருமொழி புகல்க!
அந்நிலை தானும் ஆற்றீ ராயின்
செல்லல் எமக்குச் செய்யா தமைக!
அல்லன கூறுதல் அறவே விடுக!'
 
  என்பன கூறி யிருந்தனர் ஆங்கண்; 165
     
 

போர்க்கொடி உயர்த்தல்

 
     
  புலிநிகர் வீரர் பொற்றொடி மகளிர்
கலைமலி தமிழைக் கற்றறி புலவர்
எவ்வகைத் துயரும் ஏற்றிடும் திறலோர்
அவ்வயின் யாம்யாம் ஆருயிர் ஈகுதும்
 
  என்றுரைத் தெழுந்தனர் எடுத்தனர் வஞ்சினம் 170
  துன்றிய ஆர்ப்பொலி துளைத்தது விண்ணை;
செங்கண் மறவர் சீற்றமும் ஏற்றமும்
பொங்குதல் கண்டுளம் பூரித் தெழுந்து
பற்பல அணிகள் பகுத்தனர் அடிகள்
 
  பொற்புடன் போற்றினர் போர்க்கொடி ஏற்றினர்; 175
     
 

எங்கணும் மறியல்

 
     
  அருண்மொழி ஒருபால் அடிகள் ஒருபால்
விரிமலர்ப் பூங்கொடி வேறொரு பாலும்
 

---------------------------------------------------------------

  கோள் - புறங்கூறல், அவ்வயின் - அவ்விடம்.