| உரிமை விழையுநர் ஒவ்வொரு பாலும் அணியணி யாக ஆங்காங் கணுகிப் | |
| பணிவும் கனிவும் துணிவும் பூண்டு | 180 |
| அரசியல் அலுவல் ஆற்றும் மனைதொறும் பரசுங் கோவில் பள்ளிகள் தோறும் பாடம் பயிற்றும் பள்ளிகள் தோறும் பாடும் அரங்கம் பயிலிடந் தோறும் | |
| மறியல் செய்தனர்; மருண்டனர் ஆள்வோர்; | 185 |
| வெறியோடு காவல் வீரரை ஏவினர்; | |
| | |
| அனைவரும் சிறைப்படுதல் | |
| | |
| ஏவிய சாவலர் எத்துணை வெருட்டியும் சாவது துணிந்தவர் சற்றும் விலகிலர்; அடித்தும் பிடித்தும் அச்சப் படுத்தியும் | |
| பிடித்த கொள்கையிற் பிறழ்ந்திலர் மறவர்; | 190 |
| வீரர் சீறினர் விலங்கொடு வந்தனர் போரறம் புரிந்திடும் பூங்கொடி முதலா நேரறம் பூண்டிடும் நீள்புகழ் அடிகளும் கட்டில் அடங்காக் காளையர் கூட்டமும் | |
| மட்டு வார்குழல் மங்கையர் ஈட்டமும் | 195 |
| நிறைகுண மங்கையர் அருண்மொழி அன்னையும் சிறையகம் புகுதச் செந்தமிழ் காக்க விலங்குடைக் கையராய் வீதிகள் பலவும் | |
| கலங்கலில் மனத்தராய்க் கடந்தனர் நடந்தே. | 199 |
--------------------------------------------------------------- |
| பரசும் - வணங்கும், ஈட்டம் - கூட்டம். | |
| | |