30. சிறையகம் புகுந்த காதை |
ஊரவர் உரையாடல் |
|
| தாய்கை விலங்கைத் தறிப்பான் வேண்டித் தங்கை விலங்கைத் தாங்கினர் செல்வோர் அஞ்சில ராகி அகமுகம் மலர்ந்து நெஞ்சுரம் ஏறி நிமிர்ந்தநன் னடையராய்ப் | |
| போதல் கண்ட பொன்னகர் மாந்தர் | 5 |
| வீதியின் மருங்கில் வெற்றிப் பேரொலி ஆர்த்தனர் ஒருசிலர்; அவர்புகழ் கண்டுளம் | |
|
| அறப்போர் நாடகம் | |
| | |
| வேர்த்தவர் சிலர் `இது வீண்படு முயற்சி இவரால் தமிழ்மொழி ஏற்றம் உறுமோ? | |
| எவரால் தமிழுக் கிடுக்கண் நேர்ந்தது? | 10 |
| தவறே எண்ணித் தம்பெயர் ஒளிர அறப்போர் நாடகம் ஆடினர்' என்றெலாம் பரப்பினர் பழிமொழி பண்பிலாத் தொழிலினர்; | |
|
வென்றிப் போர் |
|
| நெடும்புகழ்த் தமிழ்மொழி நீணிலத் தோங்கக் | |
| கடமுணர் இவரே காத்திட வல்லார்! | 15 |
| அடவோ இவர்தம் அரும்பெரும் முயற்சி கெடுமோ? இங்குக் கிளைபோற் புகுமொழி தடுத்து நிறுத்தத் தக்கார் யாருளர்? அடுத்த துயரெலாம் அகமகிழ் வுடனே | |
| மடுத்துத் தந்நலம் விடுத்தனர் ஆஆ! | 20 |
| தொடுக்குமிவ் வறப்போர் கொடுக்கும் வென்றியே' என்றநல் லுரைகளும் இடையிடை மிடைந்தன; | |
--------------------------------------------------------------- |
| தங்கை - தம்கை; ஒளிர - விளங்க, கடம் - கடமை, வென்றி - வெற்றி, மிடைந்தன - கலந்தன. | |
| | |