பக்கம் எண் :

பக்கம் :232பூங்கொடி

மகளிர்க் கடுக்குமோ

     
  `மகளிர்க் கித்துணை மனச்செருக் காகுமோ?
தகவுடைத் தொழிலோ! தன்றுணை, மக்கள்,
 
  இல்லறம், குடும்பம் என்றுளங் கொளாஅது 25
  மெல்லிய மாதர் மீப்படு செயலிற்
செல்லுதல் அறமோ? சீச்சீ இழிவாம்;
தெருவிடை இவ்வணம் தெரிவையர் விலங்குடன்
வருவது நாணுத் தருவ'தென் றரிவையர்
 
  அறிவுரை போற்சில அறைந்தனர் ஆங்கண்; 30
 

மகளிர் வீரம்

     
  `ஆடவர் போல அரிவையர் தாமும்
நாடும் மொழியும் நமதென எண்ணிப்
பாடு படுமிவர் பண்பினைப் போற்றுதும்;
விஞ்சுந் துயரினை வீறுட னேற்கும்
 
  வஞ்சியர் நெஞ்சம் வாழ்த்துதும் வாழ்த்துதும்; 35
  நெடும்பகை தமிழுக்கு நேர்ந்ததே என்று
குடும்பப் பணியாக் குறித்தறப் போரிற்
பங்கு கொண்டதோர் பாங்கினை ஏத்துதும்;
மங்கையர் இவரென மதித்தலு மின்றிச்
 
  செங்கை பிணித்துத் தெருவிடை யிழுத்துச் 40
  செல்லுமோ ரரசும் செங்கோ லரசோ?
நல்லார் எவரும் நாணுந் தாகைத்' தெனப்
பல்லார் குழுமிப் பாவையர் கூறினர்;
 
 

பித்தர் செயல்

     
  கற்றவர் சிலர்தாம் மற்றவர்க் கண்டு  
  `வெற்றொலி என்படும்? விளைபயன் ஒன்றிலை; 45
  பற்றுளம் உடையரேல் பைந்தமிழ் கசடறக்
கற்றுளந் தெளிக! மற்றவர் தமக்கும்
ஐயந் திரிபற அதனை விளக்குக!
 

---------------------------------------------------------------

  தன்றுணை - கணவன், நாணுத்தருவது - நாணம்தருவது.