| செய்யுந் தொழிலிது செந்தமிழ்க் காக்கம்; | |
| நையும் வகையால் நலிவுகள் எய்திக் | 50 |
| கையில் விலங்குடன் கடுஞ்சிறை புகலால் வையம் புகழும், வாழ்வுகள் நலியும்; முத்தமிழ் வளர்க்க முயல்வான் வேண்டிப் பித்தர் செயலினைப் பேணுதல் முறையோ? | |
| எத்துணைப் பயன்தரும் இச்செயல்' என்றனர்; | 55 |
|
உரிமைப் போர் |
| | |
| `கசடறக் கற்றனர் கற்றவை உரைத்தனர் நசையினை ஊட்டினர் நற்றமிழ் வளர்த்தனர்; ஆயினும் உரிமையும் அதற்குரிய நிலையும் ஏயும்நன் மதிப்பும் ஈண்டதற் கிலையே! | |
| உரிமையும் நிலையும் ஒடுங்கி வருங்காற் | 60 |
| பெருமையும் பிறவும் பேசிப் பயனென்? அரசியல் நெறியால் அயன்மொழி புகுமேல் வருமொழி ஒன்றே வளம்பெறும் செழிப்புறும்; செந்தமிழ் ஆட்சி சிறப்புறல் யாங்ஙனம்? | |
| இந்த நிலையினை எண்ணியோர் இவர்தாம் | 65 |
| எத்தகு துயரும் ஏற்போ ராகி முத்தமிழ் வளர்க்க முனைந்தனர்; தமிழின் பித்தராய்ப் பத்தராய்ப் பேணினர் அறப்போர் இத்தகு நெறியும் இன்றுள நிலையில் | |
| வேண்டுவ தொன்றே விளைபயன் உறுதி; | 70 |
| வரும்நம் பரம்பரை வாழ்வினை வேண்டிப் பொருமிவர் முயற்சியைப் போற்றுதல் வேண்டும்'என் றாயும் அறிவினர் அறைந்தனர் புகழ்ந்தனர்; | |
|
சோற்றுக் கவலை |
| | |
| அறநெறி பிறழா அறப்போர் வீரரை | |
| அரசியல் வாதிகள் அறைந்தனர் சிலசொல் | 75 |
--------------------------------------------------------------- |
| முயல்வான் - முயல. | |
| | |