குடியரசு கொடுத்த உரிமை |
| | |
| ஆட்சியில் ஆசை அரும்புதல் தீதோ? மாட்சிமை யின்றெனின் மற்றவர் அங்கே | |
| பற்றுதல் விடாஅது சுற்றுதல் ஏனோ? | 105 |
| பாரா ளுரிமை பரம்பரைச் சொத்தோ? யாரா கினுமவ் வாட்சியில் அமரக் குடியர சாட்சி கொடுத்துள துரிமை; ஆளும் நற்றிறம் அமைந்தவர் இவரென | |
| வேளை வருங்கால் விளங்குத லுறுதி; | 110 |
|
அறப்போர் வெல்லும் |
| | |
| இன்றிவர் அறப்போர் இயற்றிய ததற்கோ? நன்றறி மாந்தர் நவிலார் அங்ஙனம்; பொய்ம்மை எத்தனை புகலினும் நிலைக்குமோ? மெய்ம்மை எத்துணை மறைக்கினும் அழியுமோ? | |
| அறப்போர் வெல்லும் அன்னை மொழியை | 115 |
| மறப்போர் ஆட்சி மண்ணினுட் செல்லும் எனச்சில தலைவரும் இயம்பினர் ஆங்கண்; | |
| | |
| சிறையகம் புகுந்தனர் | |
| | |
| மனத்தொடு பட்டது மறைத்த லின்றி அனைத்தும் வெளிப்பட அறைந்தன ராகி | |
| ஒட்டியும் வெட்டியும் உரைபல நிகழ்த்திப் | 120 |
| பட்டி மன்றெனப் பலர்பலர் நிற்க, அறப்போர் நிகழ்த்திய அரிவையர் தாமும், குறட்பே றுடையார் குன்றுறை யடிகளும், இறப்பே எனினும் ஏற்போர் என்ற | |
| வரிப்போத் தனையரும் வாழ்த்தொலி யுடனே | 125 |
| சிறைக்கோட் டத்துட் சென்றனர் சிரித்தே. | 126 |
--------------------------------------------------------------- |
| விட அது - விடாமல், வரிப்போத்து - புலி. | |
| | |