31. விடுதலைக் காதை |
|
சிறையும் விடுதலை வீரரும் |
| | |
| கருங்கற் சுவரும் இரும்பின் கம்பியும் திருந்திய நெஞ்சகம் பொருந்திய உணர்ச்சியைப் பிரித்திட வல்ல பெற்றிமை யுற்றவோ? குறித்தநற் கொள்கையர் கொடுஞ்சிறைக் கொட்டிலுட் | |
| கிடப்பினும் நாடும் கிளர்ந்தெழும் அவரும் | 5 |
| தனித்தனி பிரிந்திடத் தகுவரோ? விடுதலை வேட்டெழும் வீரர்தம் ஏட்டினில் அந்நிலை காட்டுதல் கூடுமோ? கேட்டதும் இல்லை; பூங்கொடி யுளத்துப் பூத்துநல் லார்வம் | |
| யாங்ஙனம் அகலும்? ஓங்கி வளர்ந்தது, | 10 |
|
பூங்கொடி புலம்பல் |
| | |
| இனிமை மிகுதமிழ் இயம்பும் வாயினள் தனிமை தருதுயர் தாங்கி யிருப்பவள், நனிமிகும் உணர்வொடு நவின்றனள் இவையிவை, `முன்னர் ஒருநாள் மூடிய சிறையுள் | |
| தன்னந் தனியாய் இன்னலிற் கிடந்தேன் | 15 |
| செய்யாப் பழியைச் செய்தேன் என்று பொய்யாற் சிறையுட் புகுத்தினர் கவன்றேன்; இன்றென் தாய்மொழி இடுக்கண் துடைத்திடும் நன்றமர் நடாத்தி நானிலம் அறியச் | |
| சென்று புகுந்தேன் சிறையகம் அதனால் | 20 |
| ஒன்றும் மகிழ்வால் உளங்களிக் கின்றேன்; | |
| | |
| உரிமை பெறுமுன் இறவேன் | |
| | |
| நன்று புரிவோர் நலிவுறல் இயல்போ? தூய்தமிழ் வாழத் தொண்டுகள் புரிந்தேன், தாய்மொழி வளரத் தந்தேன் வாழ்வு, | |
--------------------------------------------------------------- |
| ஒன்றும் - பொருந்தும். | |
| | |